புதன், 29 மே, 2019

பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை



வல்லம், மே 28- பகுத் தறிவாளர் கழக பொறுப்பா ளர்களுக்கான பயிற்சிப் பட்டறை 2019 மே திங்கள் 18, 19 ஆகிய இரு நாட்களும் தஞ்சாவூர் வல்லத்தில் நடை பெற்றது.

துவக்க நாளன்று காலை 9 மணிக்கெல்லாம் மாநிலம் முழுமையுமிருந்து பொறுப் பாளர்கள் கலந்து கொண்டு பதிவை தொடங்கினார்கள். முற்பகல் நிகழ்வு அறிவித்தபடி காலை 10 மணிக்கு தொடங்கியது. மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் கோபு.பழனிவேல் வரவேற்புரை யாற்றினார். பயிற்சி பட்ட றையின் நோக்கம் பற்றியும், நடைபெற உள்ள வகுப்புகள் பற்றிய முன்னோட்டத்தி னையும் பயிற்சி நாட்களில் பொறுப்பாளர்கள் எப்படி கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை பற்றியும், பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் இரா. தமிழ்ச்செல்வன் உரை யாற்றினார்.

முற்பகல் 11 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் பகுத்தறிவாளர் கழகப் புர வலர் தமிழர் தலைவர் ஆசி ரியர் கி.வீரமணி அவர்கள் பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் பயிற்சிப் பட்டறையில் பயிற்சி பெற்ற ஒவ்வொருவரும் 10 புதிய  அமைப்புகளை உருவாக்கி 700 புதிய அமைப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தாங்கள் சார்ந்துள்ள ஆசி ரியர் அமைப்புகளில் பரப் புரை மேற்கொள்ள வேண் டும் எனவும், பொதுவான வர்களை ஆதரவாளராக மாற்றும் பயிற்சியில் ஈடுபட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். எது நம்மைப் பிரிக்கிறதோ அதை அலட்சியப் படுத்த வேண்டும், எது நம்மை இணைக்கிறதோ அதை பலப்படுத்த வேண்டும். சாதனையாளர்களை ஆங்காங்கு பாராட்டிட தயங் கக்கூடாது.

குழந்தைகளுக்கு தமிழ் பெயர்களை சூட்ட வேண்டும். வடமொழி பெயர்களை தமிழ்ப்படுத்திப் பார்த்தால் அசிங்கமாக இருக்கும். வட மொழிப் பெயர்களை மாற்றம் செய்வதை இயக்க மாகவே செய்யலாம். எழுதக் கூடியவர்கள் எழுதுங்கள். பேச வாய்ப்பு கிடைத்தவர்கள் பேச்சாளர்களாக வாருங்கள். கோபம் ஏற்படவே கூடாது. அன்பு செய்ய வேண்டும். பொதுவானவர்களை கருத்து  தெரிவித்து, கருத்தால் ஒத் திசைய வைத்து ஆதரவாள ராக கொண்டு வர வேண்டும். (சிஷீஸீஸ்வீஸீநீமீ ணீஸீபீ சிஷீஸீஸ்மீக்ஷீ) என சிறப்புரையாற்றினார்கள், பயிற்சியாளர்கள் கேள்விகள் கேட்க தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் பதிலளித்தார்கள். முற்பகல் அமர்வு பகல் ஒரு மணிக்கு நிறைவு பெற்றது.

பிற்பகல் நிகழ்ச்சியில் 2.15 மணி அளவில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் "பகுத்தறிவு ஓர் வாழ்க்கை நெறி" என்ற தலைப்பில் உரையாற்றினார். பகுத்தறிவாளர்கள் கழகத் தினை தந்தை பெரியார் தோற்றுவித்ததைப் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றி யும் பேசினார்.

தொடர்ந்து பேராசிரியர் தேவதாஸ் அவர்கள் பகுத் தறிவாளர் கழகத்தில் புதிய உறுப்பினர்களை சேர்த்தல், தக்க வைத்தல் பற்றி உரை யாற்றினார்.

தொடர்ந்து திராவிடர் கழகப் பொருளாளர் வீ.கும ரேசன்  அவர்கள் "பகுத்தறி வாளர் கழகம் சிறப்பாக எப்படி செயல்பட வேண்டும்" என்ற தலைப்பில் அமைப் பியல் உரை வழங்கினார். தேநீர் இடைவேளைக்குப் பின் மாலை 4.30 மணி அளவில் மகேந்திரா சிட்டி, இன்ஃபோசிஸ் நிறுவன ஜோஸ்பின் சாந்தி "நேர மேலாண்மை" என்ற தலைப்பிலும், "பேச்சுக்கலை" என்ற தலைப்பிலும் பொறுப் பாளர்கள் நேரத்தை எப்படி சிறப்பாக மேலாண்மை செய்து, வெற்றிகரமான பேச் சாளராக  ஆவது எப்படி என்றும், வெற்றியாளர்கள் பின்பற்றவேண்டியவைகள் பற்றியும் விளக்கி பேசி னார்கள்.  பயிற்சியாளர்களின் கேள்விகளுக்கு விடையளித் தார்கள். பிற்பகல் நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு அரங்கத்தில் நிறைவடைந்தது.

இரவு நிகழ்ச்சி மாலை 7 மணிக்கு புல்வெளியில் தொடர்ந்தது. வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மேனாள் இணை இயக்குநர் க.பன்னீர் செல்வம் "சாதித்துக் காட்டும் குழுவை உருவாக்குவது எப் படி என்ற தலைப்பில் பயிற்சி அளித்தார். 8.30 மணிக்கு முதல் நாள் நிகழ்ச்சி நிறை வடைந்த உடன் பயிற்சியா ளர்கள் இரவு உணவுக்கு சென் றார்கள்.

19.5.2019 அன்று இரண் டாம் நாள் நிகழ்ச்சி காலை 9.30 மணிக்கு தஞ்சாவூர் மாவட்ட பகுத்தறி வாளர் கழக அமைப்பாளர் பா.ராசு அவர்களின் பகுத் தறிவு பாடலுடன் தொடங் கியது. பகுத்தறிவாளர் கழக தலைவர் மா.அழகிரிசாமி "பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் அமைப்பு ரீதியாக செயல்படுவது எப் படி" என்ற தலைப்பில் உரை யாற்றினார். தொடர்ந்து பயிற்றுநர் டாக்டர் கணேஷ்வேலுச்சாமி அவர்கள் "அறிவியல் சந்தே கங்கள்" என்ற தலைப்பில் கணினி திரை வழியே பல்வேறு அரசியல் சந்தேகங் களுக்கு விளக்கம் அளித்து பேசினார். தேநீர் இடை வேளைக்கு பின்னர் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள், "நமது அணுகுமுறை பற்றியும் அமைப்பாக (நெட் வொர்க்) இணைந்து செய லாற்றுவது பற்றியும்" விளக்கிப் பேசி னார்கள். அவரது உரைக்கு பின்னர் பயிற்சி யாளர்களின் கேள்வி களுக்கு விடையளித்தார்கள். தொடர்ந்து பயிற்சியா ளர்கள், பொறுப்பாளர்கள் குழு ஒளிப்படம் எடுத்துக் கொண்டார்கள். முற்பகல் அமர்வு நிறை வடைந்தது.

மதிய உணவு இடை வேளைக்குப் பின்பு "மக்களை ஈர்ப்பதற்கான தலைமைப் பண்புகள்" என்ற தலைப்பில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மேனாள் இணை இயக்குநர் தி.க.பன் னீர்செல்வம் அவர்கள் உரை யாற்றினார்கள்.

பங்கேற்ற பயிற்சியாளர் களுக்கு கருத்துக் கேட்பு படிவங்களை மாநிலத் துணைத் தலைவர் கா.நல்ல தம்பி வழங்கினார். பயிற்சி பற்றிய கருத்துக் களை மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்கள் ராயகிரி கே.டி.சி.குருசாமி, அண்ணா சரவணன், ச.மணி வண்ணன், அ.தா. சண்முக சுந்தரம், அ.சரவணன், காரைக்குடி மு.சு. கண்மணி, திருவண்ணாமலை பா.வெங்கட்ராமன், வட சென்னை கோவி.கோபால், மறைமலை நகர் அ.சிவக் குமார், மதுக்கூர் ஆ.இரத் தினசபாபதி, கல்லக்குறிச்சி ம.சுப்பராயன், புதுச்சேரி கு.இரஞ்சித்குமார், தஞ்சாவூர் ச.அழகிரி, உசிலம்பட்டி அ.மன்னர்மன்னன், பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில அமைப்பாளர் ஆத் தூர் வா.தமிழ் பிரபாகரன், லால்குடி மு.செல்வி, திருச்சி மதிவாணன் ஆகியோர் வழங்கினார்கள்.

பயிற்சியாளர்களுக்கு பெரியார் மணியம்மை பல் கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.வேலுச்சாமி சான்றிதழ்களை வழங்கி பாராட்டுரை வழங்கினார். பயிற்சியாளர்களுக்கு  சான்றிதழுடன் இரண்டு நூல்கள் நினைவுப் பரிசாக வழங் கப்பட்டன. பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில அமைப் பாளர் எஸ்.ரமேஷ் நன்றி கூறினார். மொத்தம் 72 பேர் கலந்து கொண்டனர்.

- விடுதலை நாளேடு, 28 .5 .2019

பகுத்தறிவாளர் கழகப் பயிற்சிப் பட்டறையில் பங்கு பெற்றோர்

தஞ்சை வல்லத்தில் மே மாதம் 18, 19 தேதிகளில்  நடைபெற்ற பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் களுக்கான பயிற்சிப் பட்டறையில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மா.அழகிரிசாமி, பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர்கள், பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர்கள் பயிற்சியாளர்கள் உள்ளனர்.

 - விடுதலை நாளேடு, 24 .5 .2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக