வெள்ளி, 2 மார்ச், 2018

ஆன்மிக அரசியல் இந்த உலக மக்களுக்குச் செய்த நன்மைகள் என்ன?


“பசுத்தோல் போர்த்திய புலி” என்பது வேறொன்றுமில்லை. அது தான் “ஆன்மிக அரசியல்” என்ற பெயரால் தமிழ்நாட்டைக் கபளீகரம் செய்யப் புறப்பட்டிருக்கும் ஆரிய மதவாத அரசியல்.

“மதவாதக் காரணங்களுக்காக, உலகில் சிந்தப்பட்டிருக்கும் ரத்தம் தான் அதிகம்” என்றார் கவிஞர் கனிமொழி. உலகை மாற்றி யமைத்த விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புக ளுக்கு எதிராகவும், அந்த விஞ்ஞானிகளின் உயிர்களையும் பலி வாங்கியது மதவாதத் தின் பிடிவாதம் தான் என்பதை ரஜினியும் அவ ரைச் சார்ந்தவர்களும் உணர்வார்களாக!

கோப்பர்னிக்கஸ்

உலகம் உருண்டை - அது தனது அச்சில் தன்னைத் தானே 24 மணி நேரத்திற்கு ஒருமுறை சுற்றிக்கொண்டு, வருடத்திற்கு ஒருமுறை சூரியனையும் சுற்றிவருகிறது என்ற உண்மையைக் கண்டுபிடித்தார். இது மதக்கோட்பாடுகளுக்கு எதிரானது எனப் பயந்து, அவரது கண்டுபிடிப்பை புத்தக மாக வெளியிடவில்லை.

அவரது 70ஆவது வயதில் மரணப் படுக்கையில் இருக்கும்போது 1543இல் “புரட்சிகளின் விண்மண்டல சுழற்சி” என்கிற புத்தகம் அவரிடம் கொடுக்கும்போது, கைகள் நீண்டது - கண்கள் மூடின, உயிர் பிரிந்தது.

விஞ்ஞானி புருனோ

“பிரபஞ்சம் எல்லையற்றது. விண்மீன் கள் ஒவ்வொன்றும் சூரியனே” என்று கூறினார். இது மதக்கோட்பாடுகளுக்கு விரோதமானது. புரூனோ மதவிரோதி, அவரை உயிருடன் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று தீர்ப்புக்கூறி பிப்ரவரி 8, 1600இல் ரோம் நகர நடுவீதியில் கட்டை களை அடுக்கி தீயிட்டுக்கொன்றனர்.

கலிலியோ

முதன் முதலாக ஆகாயத்தை தொலை நோக்கி மூலம் பார்த்தார். 1609ஆம் ஆண்டு தொலைநோக்கியைக் கண்டு பிடித்து, பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு, சூரியனை யும் சுற்றி வருகிறது என்பதை ஆதாரத்து டன் விளக்கினார். இதை 1632இல் புத்தகமாக வெளியிட்டார். இவரை மத துரோகி என குற்றம் சாட்டி, கைது செய்து 8 ஆண்டுகள் வீட்டுச்சிறை யில் அடைக்கப்பட்டார். 1642இல் ஜனவரி 8ஆம் நாள் உயிர் துறந்தார்.

அந்த மாமனிதன் இறந்து 352 ஆண்டு கள் கழித்து அவர் நிரபராதி என தீர்ப்பு வழங்கப்பட்டது. இது எப்படி இருக்கு?
விஞ்ஞானி லாவாசியர்

எரிதலுக்கு உதவும் வாயுவிற்கு ஆக்ஸி ஜன் என்கிற பெயரை இவர்தான் முதன் முதலில் வைத்தார். நீர் என்பது ஆக்ஸிஜ னும் ஹைட்ரஜனும் இணைந்து ஏற்பட்ட வேதியியல் கலப்புத்தான் என அறிவித் தார். கெமிக்கல் என்கிற வார்த்தையை உருவாக் கினார்.

சுவாசத்தின்போது ஆக்ஸிஜனை எடுத் துக் கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகிறோம் என்பதை அறிவித்தார். மனிதனின் உடல் எப்போதும் வெப்பமாக இருப்பதற்குக் காரணம் உடலில் இடை விடாது எரிதல் நடந்து கொண்டேயிருக் கிறது என்று கூறினார்.

ஃபிரெஞ்சு புரட்சி முடிந்து, ஏற்பட்ட புதிய அரசாங்கம், முன்பிருந்த அரசாங் கத்துக்கு துப்பாக்கி மருந்து தயாரித்துக் கொடுத்தார் எனக்குற்றஞ்சாட்டி, மே 8, 1794 அன்று தலைவெட்டும் கருவியில் இவர் தலை வெட்டி வீசப்பட்டது.

பெண் விஞ்ஞானி மேரி கியூரி

1903ஆம் ஆண்டு மேரி கியூரி மற்றும் பியார்கியூரி ஆகியோருக்கு இயற்பிய லுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. முதன் முதலில் நோபல்பரிசு பெற்ற பெண் மணி மேரி கியூரி - 1911ஆம் ஆண்டு வேதி யியல் (ரேடியம் கதிரியக்கம்) சாதனைக்காக இரண்டாவது நோபல் பரிசு கிடைத்தது.

பெண்களுக்கு எதிரான பழமை வாத மதக்கருத்து காரணமாக, பாரிஸில் உள்ள புகழ்பெற்ற விஞ்ஞானக் கழகத்தில் உறுப் பினராக சேர்த்துக் கொள்ளவில்லை. அறி வியல் என்பது மனிதநேயம். ஆன்மிகம் என்பது ஏமாற்று மாயம்.

மதவாத(ம்) நோய் உலகைப் பிடித்த பீடை என்பதை உணர்ந்திருப்பீர்கள். மதவாதிகள், மின்சாரம், மின் விசிறி, ஆடியோ, வீடியோ, தொலைக்காட்சி, குளிர்சாதனம் என அனுபவித்துக் கொண் டிருந்தாலும், தங்களது சுயநலத்துக்காக ஆன்மிக அரசியல் (பழைய கள்ளு புதிய மொந்தை - ரஜினி) எனும் முகமூடியை மக்கள் கிழித்தெறிவார்கள்.

நன்றி! வணக்கம்.

(ஆதாரம்: “உலகை மாற்றிய விஞ்ஞானிகள்)

- கா.நா.பாலு, மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம், சேலம் மாவட்டம்
- விடுதலை ஞாயிறு மலர், 24.2.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக