ஞாயிறு, 5 ஜூன், 2016

நாஸ்திகம்


5.5.1929 (குடிஅரசிலிருந்து)
எனக்கு விக்கிரக ஆராதனை யில் சிறிதும் நம்பிக்கை இல்லை. ஜெபம் வேண்டாம்.
கோயில்சென்று கும்பிட வேண்டாம். சாம்பிராணி முதலிய செலவு செய்து பூஜைபோட வேண்டாம், தாழ்த்தப்பட்டவர் களையும் தீண்டாதவர்கள் என்று கொடுமை செய்யப்பட்டவர் களையும் நெற்றிவேர்வை நிலத் தில் சிந்த சரீரத்தால் வயல்களில் பாடுபட்டு உழைக்கின்ற ஏழைகளையும் பார். அவர்களை கவனிப்பதில் ஈஸ்வரனைக் காண். - ரவீந்திரநாத் தாகூர்
சன்மார்க்கங்களுக்கு முக்கிய தடைகள் சமயங்கள் - மதங்கள், மார்க்கங்கள் என்பர். அவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும் வருணாசிரமம் முதலியவைகளும் எங்கள் மனதில் பற்றாவண்ணம் அருள் செய்தல் வேண்டும்.- இராமலிங்க சுவாமிகள்
பச்சை நாஸ்திகம்
சாத்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கிச் சூத்திரத்தைக் கண்டு சுகம் பெறுவதெக்காலம்
சாத்திரத்தைச் சுட்டு மனுதர்ம சாஸ்திரத்தைச் சுட்டு பொசுக்கி, சதுர்மறையை பொய்யாக்கி மேல்கண்ட சாஸ்திரத்திற்கு ஆதாரம் என்று சொல்லப்படும் நான்கு வேதங்களையும் சுத்தப்புரட்டு என்று தள்ளி சூத்திரத்தைக் கண்டு பகுத்தறிவின் ஆராய்ச்சியில் இயந்திரங்களைக் கண்டுபிடித்து சுகம் பெறுவதெல்லாம்  அவைகளினால் மனித சமூகமும் சுகமடைவது எப்போது வாய்க்கப் போகின்றது?
- பத்திரகிரியார்

-விடுதலை,26.2.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக