ஞாயிறு, 12 ஜூன், 2016

பகுத்தறிவாளர் தபோல்கரை படுகொலை செய்த இந்துத்துவாவாதி கைது


கல்புர்கி, பன்சாரேவை கொன்றதும் இந்த கும்பல் தானா?
படுகொலை செய்யப்பட்ட பகுத்தறிவாளர்கள்

புனே ஜூன் 12 புனேயை சேர்ந்த தலைசிறந்த பகுத்தறிவுவாதியும், சிறந்த சிந்தனையாளருமான நரேந்திர தபோல்கர் கடந்த 2013ஆ-ம் ஆண்டு ஆகஸ்டு 20-ஆம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இரண்டு ஆண்டுகளாக நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் எந்த ஒரு முன்னேற் றமும் இல்லாததால் இந்த வழக்கை  மத்திய புலானாய்வுத் துறைக்கு  மாற்றி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, இந்தக் கொலை வழக்கை மத்தியப் புலானாய் வுத்துறை. அதிகாரிகள் விசா ரித்து வந்தனர். இந்த நிலையில், தீவிர விசாரணைக்கு பின்னர் நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் தொடர்புடைய முக் கிய குற்றவாளியை சி.பி.அய். அதிகாரிகள் ஜூன் 9-ஆம் தேதி  மும்பையை அடுத்த பன்வேல் என்ற என்ற நகரத்தில்  கைது செய்தனர். விசாரணையில், அவரது பெயர் வீரேந்திரசிங் தாவ்டே என்பதும், அவர் சனா தன் சன்ஸ்தாவின் உறுப்பினர் முக்கிய உறுப்பினர் என்பதும் தெரியவந்துள்ளது. அவர் காது, மூக்கு, தொண்டைக்கான மருத் துவர் என்னும் மற்றொரு தக வலும் வெளியாகியுள்ளது.
மூன்றாண்டுகளுக்குப்
பிறகு கைது

நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் ஏறத்தாழ மூன்றாண்டுகளுக்குப் பிறகு, முக்கிய குற்றவாளியை சி.பி. அய். கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இக்கொலை தொடர்பாக கர்நாடகா, மகாராஷ்டிரா மாநில காவல்துறையினர் இணைந்து புலன்விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் ஆரம்பத் தில் இருந்தே சனாதன் சன்ஸ்தா என்ற இந்து தீவிரவாத அமைப் பினர் தொடர்புடைய பல சான்றுகள் கிடைத்தன.

இந்த நிலையில் 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சனாதன் சன்ஸ்தா விற்கு உறுப் பினர்களைச் சேர்க்கும் பிரிவின் தலைவராக செயல்பட்ட சமீர் என்பவரை கோலாப்பூரில்  கர் நாடக மாநில காவல் துறை யினர் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து  விசாரித்து வந்தனர்.

விசாரணையின் போது அவ ருடைய வீட்டில் இருந்து கைப் பற்றப்பட்ட நாட்குறிப் பேட்டை ஆய்வு செய்தனர். அதில் உள்ள தொலைப்பேசி தொடர்பு எண்கள் அனைத்தும் மங்களூரு, புனே, மும்பை போன்ற நகரங்களில் உள்ள நபர்களின்   எண்களாகும்.  இந்த எண்கள் அனைத்தும்  நரேந்திர தபோல்கர், கோவிந்த பன்சாரே மற்றும் கர்நாடகாவில் வைத்து கொலை செய்யப்பட்ட கல்புர்கி ஆகிய மூவரின் கொலை பற்றிய சந்தேக வளையத்திற் குள் வந்தவர்களின் தொடர்பு எண்கள் என்பது தெரிய வந் தது.  இதில் உள்ளவர்கள் அனை வரும் சனாதன் சன்ஸ்தா என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த வர்கள் எனவும் தெரியவந்துள் ளது. இந்தப் பட்டியலில் உள் ளவர்களைத் தீவிரமாக விசாரித் தும் அவர்களிடம் கைப்பற்றப் பட்ட ஆவணங்களை வைத்தும் நரேந்திர தபோல்கரின் கொலை யில் மூளையாக செயல்பட்ட வீரேந்திரசிங் தாவ்டே  கைது செய்யப்பட்டுள்ளார்.

சனாதன் சன்ஸ்தா

கோவா நகரில் உள்ள சனாதன் சன்ஸ்தா தலைமை அலுவலகம் மூடநம்பிக்கையின் தலைமையிடமாகத் திகழ் கிறது. இந்து அமைப்புகள் நடத்தும் கல்விச் சாலைகள், கோவாவிற்கு மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லும் போது சனாதன் சன்ஸ்தாவிற்கு கட்டாயம் அழைத்துச் செல் லும். அங்கு குழந்தைகளுக்கு மூளைச்சாயம் ஏற்றப்படும். இது குறித்து பல்வேறு புகார் கள் எழுந்த போதிலும் அதன் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

காஞ்சி சங்கராச்சாரியும், சனாதன் சன்ஸ்தாவும்

சனாதன் சன்ஸ்தாவின் பன்வேல்(மகாராஷ்டிரா) கிளைக்கு 10.6.2009 அன்று காஞ்சி சங்கராச்சாரி வந்தார். அப்போது அவர் கூறியதாவது: சனாதன் சன்ஸ்தா இந்து மதத்தின் பாரம்பரியம், வழி பாட்டுமுறை மற்றும் இந்துக் களின் பாதுகாவலராகச் செயல் படுகிறது. சனாதன் சன்ஸ்தா வின் செயல்பாட்டின் மூலமாக இந்துமத பாரம்பரியம் மீட் டெடுக்கப்பட்டுக் கொண்டு வருகிறது. விரைவில் இந்தியா முழுவதும் இந்து தர்மத்திற்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்ட வழிபாட்டு முறைகளும், பாரம் பரிய பழக்க வழக்கங்களும் மறுபிறவி எடுக்கும். இந்தப் பணியில் சனாதன் சன்ஸ்தா தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்று கூறினார்.   கோவா, மகாராஷ்ரா வில் நடந்த பல்வேறு குண்டு வெடிப்புகளில் இந்த அமைப் புகளுக்கு தொடர்பு இருப்பது உறுதியானது. இந்த அமைப் பைச் சேர்ந்தவர்கள் பலர் சிறையில் உள்ளனர்.

பகுத்தறிவாளர்
கொலை ஏன்? 

நரேந்திர தபோல்கர், கல் புர்கி மற்றும் கோவிந்த பன் சாரே போன்றவர்கள் மகாராஷ் டிரா, கர்நாடகா, கோவா போன்ற பகுதிகளில் நடக்கும் மூடநம்பிக்கை செயல்பாடு களை கடுமையாக எதிர்த்து வந்தனர். மேலும் மதச்சடங் குகள் மூலம் பணம், காலம், மக்களின் உழைப்பு வீணாகிறது என்ற கருத்து தபோல்கரின் பொதுக்கூட்டங்கள் வாயிலாக மக்களிடையே மிகவும் வேக மாக பரவ ஆரம்பித்தது, முக்கி யமாக தீவிர விநாயகர் வழி பாட்டை மேற்கொண்டிருந்த மக்கள் தபோல்கரின் கருத்துக் களை மிக விரைவில் ஏற்றுக் கொண்டனர்.

இதன் தாக்கம் 2005-ஆம் ஆண்டு 35000 விநாயகர் மண் டல்கள் புனேவில் இருந்தன. 2011-ஆம் ஆண்டு வெறும் 8000 மண்டல்களாக குறைந்து விட்டது.  இளைஞர் அமைப் புகள் பல தபோல்கரின் கருத் துக்களால் ஈர்க்கப்பட்டு சமூக சேவையில் ஈடுபட்ட காரணத் தால்தான் விநாயகர் மண்டல் கள் குறைந்துவிட்டன.

இது போன்ற பல்வேறு மதம் தொடர்பான விழாக்களில் ஈடு பட்ட இளைஞர்கள் சமூக சேவையில் ஈடுபட ஆரம்பித்து விட்டனர்.

இதனால் சனாதன் சன்ஸ் தாவின் பிரச்சாரங்களில் பெரி தும் பாதிப்பு ஏற்பட்டது, சனா தன் சன்ஸ்தாவிற்கு உறுப்பி னர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்துகொண்டே சென்றது ஆகவே மிகவும் திட்டமிட்டு இந்த அமைப்பினர் நரேந்திர தபோல்கர், கல்புர்கி மற்றும் கோவிந்த பன்சாரேவை கொலை செய்துள்ளனர்.
-விடுதலை,12.6.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக