ஞாயிறு, 17 ஜூலை, 2022

பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் (ஜூலை 13-- 9.7.2022 சனி)


சென்னை, ஜூலை 13-- 9.7.2022 சனி மாலை 7 மணிக்கு பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.பகுத்தறி வாளர் கழகத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் தலைமை தாங்க, பொதுச் செயலாளர் தோழர் ஆ. வெங்கடேசன் வரவேற் புரையாற்றினார்.

இந்த நிகழ்வில் மாநில துணைத் தலைவர்கள் முறையே அ.தா.சண்முக சுந்தரம், கரிகாலன், வேண் மாள், வேல்.சோ.நெடு மாறன், அருட்செல்வன் மற்றும் மாவட்ட பொறுப் பாளர்கள் இராகு (வட சென்னை) மாணிக்கு, வேணுகோபால் (தென் சென்னை), கார்த்தி கேயன் (ஆவடி), அரசு, ஜெயராமன் (சோழிங்க நல்லூர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுபோன்ற கலந்து ரையாடல்கள் வெளியில் நடந்தால் நன்றாக இருக் கும் என்று தோழர் கார்த் திகேயன் கருத்து சொன் னார். தோழர் அ.தா.சண் முகசுந்தரம் மாவட்ட அளவில் கையில் நிதி இருக்கும் வண்ணம் செயல் வேண்டும் என்றும், தோழர் வேண்மாள் இணைய வழி யில் நடந்தால் நன்றாக இருக்கும் என்றும், தோழர் வேல்.சோ.நெடுமாறன் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என் றும், தோழர் ஜெயராமன் தலைமை சொல்படி செயல்படுவோம் எனவும் குறிப்பிட்டனர்.

இறுதியாக இரா.தமிழ்செல்வன் எல்லா வற்றைப் பற்றியும் விளக் கமாக பேசினார்.

1. மாவட்ட பொறுப் பாளர்கள் தலா பத்து விடுதலை சந்தா,

2. தி மார்டன் ரேஷன லிஸ்ட் தொடர்பாக ஆங் கிலத்தில் கலந்துரையா டல்,

3. புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து,

4. விரைவில் எல்லா மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செல்வது குறித்து,

5. திமிஸிகி மாநாடு பர் னலாவில் நடக்க இருக்கி றது - அது பற்றியும்

6. பெரியார் 1000 தேர் வுகள் மிகவும் சிறப்பாக நடத்த வேண்டும் என் றும் பேசினார். கடைசி யாக தோழர் அ.தா.சண் முகசுந்தரம் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக