செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

பொதுத் துறைகளில் பணிபுரிவோர் மத அடையாளங்களை கொண்டிருக்கக்கூடாது

சுவிட்சர்லாந்தில் மதச்சார்பின்மைக்கான சட்டம்  பொதுமக்கள் வாக்கெடுப்பில் 55 சதவிகிதம் ஆதரவு




2012-2016 ஆம் ஆண்டு வெளியான புள்ளிவிவரங்களின்படி ஜெனீவாவில் மதமற்றவர்கள் 38 விழுக்காடு, ரோமன் கத்தோலிக்கர்கள் 35 விழுக்காடு, புரோட்டஸ்ட்ன்ட் 10 விழுக்காடு, பிற கிறித்தவ பிரிவு 6 விழுக்காடு, முசுலீம்கள் 6 விழுக்காடு, பிற மதத்தவர்கள் 6 விழுக்காடு உள்ளனர்.


ஜெனீவா, பிப்.12 சுவிட்சர்லாந்து நாட்டில் அரசுத் துறைகளில் நியமிக்கப்படும் அலுவலர்கள், பொதுத் துறைகளில் பணியாற்றுவோர் எவரும் எந்தவித மத அடையாளங்களையும் கொண்டிருக்கக் கூடாது.மதஅடையாளச்சின்னங்கள், மத உடைகள் உள்ளிட்டவற்றை தடுக்கும் வகையில்மதச்சார்பின்மைக்கானசட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.10.2.2019அன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் 55 விழுக் காட்டுக்கும் மேல் வாக்குகள் சட்டத்துக்கு ஆதரவாக அளிக்கப்பட்டுள்ளது.

ஹிஜாப்உள்ளிட்டமதஅடையாளங் களைவெளிப்படுத்துகின்றஉடைகளை பள்ளிகளில்  ஆசிரியர்கள் அணிந்திருக்கக் கூடாதுஎன்று ஜெனீவாவில் ஏற்கெனவே தடை போடப்பட்டுள்ளது.

அரசுத் துறைகளில் பணியாற்றக்கூடிய அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மக்களிடையே நேரடியாக தொடர் பிலுள்ள பொதுத்துறை ஊழியர்கள் அனைவரும் இப்புதிய சட்டத்தின்படி, மத அடையாளச் சின்னங்கள் மற்றும் மத அடையாளத்தை வெளிப்படுத்தக்கூடிய உடைகளை உடுத் தக்கூடாது என்று அச்சட்டத்தில் கூறப்பட் டுள்ளது.

இசுலாமிய மற்றும் கிறித்தவ மத நிறுவனங்கள் இச்சட்டத்துக்கு எதிராக களமிறங்கனாலும்,சுவிட்சர்லாந்து நாட் டின் புகழ்பெற்ற ஜனநாயக முறையில் மக்களே நேரடியாக வாக்கெடுப்பில் கலந்து கொண்டனர். அந்த வகையிலேயே 55 விழுக்காட்டினர் மதசார்பற்ற சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ள னர்.

சுவிட்சர்லாந்துநாட்டின் அரசமைப் புச்சட்டத்துக்குமாறானதாகவும்,அய் ரோப் பியசமூகத்தில் மனித உரிமை களுக்குஎதிரானதாகவும்  புதிய சட்டம் உள்ளதாக பசுமைக் கட்சியின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட அலுவலர் சபைன் தைகேமவ்னின் கூறுகிறார்.  நீதிமன்றம் எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நம்புகிறோம் என்றார். இவர் முசுலீம் பெண்கள் அணிகின்ற முகத்தை மூடுகின்ற உடையை அணிந்தவர்.

பசுமைக்கட்சி, பெண்ணிய அமைப் புகள், முசுலீம் அமைப்புகள் உள்ளிட்ட அமைப்புகள் மதச்சார்பற்ற சட்டத்துக்கு எதிராக உள்ளன. பாகுபாடுகளுடன், இசு லாமிய எதிர்ப்புணர்வுடன் புதிய சட்டம் இருப்பதாகவும், குறிப்பாக முகத்தை மூடுகின்ற பெண்களுக்கு எதிராக உள்ளதாக எதிர்ப்பாளர்கள் கூறு கின்றனர்.

1907ஆம் ஆண்டிலிருந்து சுவிட்சர் லாந்து நாட்டில் நடைமுறையிலுள்ள அரசமைப்புச் சட்டத்தில் தற்போது திருத்தம்மேற்கொள்ளப்பட்டு,மதச் சார்பற்ற சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்துநாட்டில்நிறைவேற் றப்பட்டுள்ள மதச்சார்பற்ற சட்டம் குறித்து அரசுடன்  மத அமைப்புகள்  விவாதிக்கலாம். பொது இடங்களில் மதத்தை வெளிப்படுத்துவோர் எண் ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கான ஒத் துழைப்பதற்கான நடவடிக்கையை மேற் கொள்ளலாம் என்று புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.இதன்மூலம்,மதநம் பிக்கையாளர்கள்மற்றும்மதநம்பிக்கை இல்லாதவர்கள் குறித்து அரசமைப்புச்சட்டம் கூறுகின்ற  மதம் குறித்த உரிமைகள், வரையறைகள் குறித்து விளக்கமளிக்க உதவும் என்கின்றனர் மதச்சார்பற்ற சட்டத்தை ஆதரிக்கும் தரப்பினர்.

-  விடுதலை நாளேடு, 12.2.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக