வெள்ளி, 8 டிசம்பர், 2017

டிசம்பர் 10 : கேரளா - கோழிக்கோடு சமூகநீதி - மதச் சார்பின்மை கருத்தரங்கில் தமிழர் தலைவர் தலைமை உரையாற்றுகிறார்


கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெறும் காமராஜ் நிறுவனத்தின்(Kamaraj Foundation of India) 41ஆம் தேசிய மாநாட்டில் தமிழர் தலைவர் பங்கேற்கிறார். மூன்று நாள்கள் 2017 (டிசம்பர் 8,9 & 10) நடைபெறும் மாநாட்டின் மூன்றாம் நாள் (டிசம்பர் 10) முற்பகல் 10 மணியளவில் நடைபெறவுள்ள "சமூகநீதி - மதச் சார் பின்மைக்கான அறைகூவல்கள்" கருத்தரங் கில் தமிழர் தலைவர் தலைமை உரை யாற்றுகிறார். கருத்தரங்கில் கேரள சட்டமன்ற தலைவர் பி. சிறீராமகிருஷ்ணன், ஜனதா தள கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரேந்திரகுமார் மற்றும் பல்வேறு சமூகநீதி - மதச் சார்பின்மை அமைப்பின் தலைவர் களும் கலந்து கொள் கின்றனர். முதல் நாளில் மாநாட்டை கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைக்கிறார்.

1976ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட காமராஜ் நிறுவனம் நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. கோழிக் கோட்டில் நடைபெறும் மாநாட்டு ஏற்பாடுகளை காமராஜ் நிறுவனத்தின் தேசிய தலைவர் டாக்டர் நீலலோகிததாசன், தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர்  முனைவர் ஜான்குமார் மற்றும் நிறுவன உறுப்பினர்களும் சிறப்பாகச் செய்துள்ளனர்.
- விடுதலை நாளேடு,8.12.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக