சனி, 13 பிப்ரவரி, 2016

இடைவிடாத போர் நடக்க வேண்டும்!


நமது கல்விப் புரட்சி வேலைகளில், மக்களை மயக்கும் மதத்தோடு போர் புரிவது ஒரு முக்கிய வேலையாகும். இந்தப் போர் இடைவிடாமல், அமைப்புத் திட்டத்தோடும் உறுதியாய் நடத்தப்பட வேண்டும். தொழிலாளருடைய ஆதிக்கத்தில் கோயிலுக்கு அரசாங்கம் எவ்வித ஆதரவும் அளிக்கக் கூடாது.
பாதிரிக் கூட்டங்கள் புரட்சிக்கு விரோதமாகச் செய்து வரும் வேலைகளைக் கண்டிப்பதுடன் அடக்க வேண்டும்.
ஆனால், அதே சமயத்தில் மதத்திற்கு விரோதமான பிரச்சாரம் நடத்துவதற்கு சாத்தியமான முயற்சிகள் எல்லாம் செய்யப்படும். கோயிலுக்கு ஏற்பட்டிருக்கும் பெருமையும் செல்வாக்கும் ஒழிக்கப்படும்.
- 1908ஆம் ஆண்டு சர்வதேச பொதுவுடைமைக் கட்சியின் 6ஆவது உலக காங்கிரசில் லெனின் பேச்சு.
-விடுதலை,11.12.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக