வியாழன், 16 பிப்ரவரி, 2023

ஆந்திர மாநிலம் குண்டூரில் பி.பி. மண்டல் சிலை திறப்பு

ஆந்திர மாநிலம் குண்டூரில் பி.பி.மண்டல் சிலையை தமிழர் தலைவர் ஆசிரியர் திறந்து வைத்தார் - 12.2.2023

ஆந்திர மாநிலம் குண்டூரில் சினிஸ் ஸ்கொயர் முக்கிய சாலையில் நிறுவப்பட்டுள்ள பி.பி.மண்டல் அவர்களின் சிலையை சமூகநீதிப் போராளி - தலைவர், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். அவ்வமையம் மாநில அரசின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிற மாநில மேனாள் அமைச்சர்கள், ஆந்திர சட்டமன்ற உறுப்பினர்கள், மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கலந்துகொண்டனர். விழா அமைப்புக் குழுவின் தலைவர் ஆந்திர மாநில சட்டமன்றத்தின் கொறடா தங்கா.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.சி., அவர்களும், செயலாளர் டாக்டர் ஆலா வெங்கடேஸ்வரலு அவர்களும், குண்டூர் மாநகராட்சி மேயர், அனைத்துக் கட்சி சமூகநீதி ஆர்வலர்களும் உடனிருந்தனர். பலத்த கரவொலிக்கிடையே  தமிழர் தலைவர் அவர்களால் சிலை திறக்கப்பட்டது (12.2.2023).

ஆந்திர மாநிலம் குண்டூரில் பி.பி. மண்டல் சிலை திறப்பு

ஆந்திர மாநிலம் குண்டூரில் பி.பி. மண்டல் சிலையினை திறந்து வைப்பதற்கு இன்று அதிகாலை 3.45 மணிக்கு (12-2-2023) விஜயவாடா ரயில் நிலையத்திற்கு வருகை தந்த திராவிடர் கழகத் தலைவரை விழாக் குழுவினர் வரவேற்றனர். உடன்: கழகப் பொருளாளர் வீ. குமரேசன், கழக அயலுறவு அணிச் செயலாளர் கோ. கருணாநிதி.

குண்டூரில் பி.பி.மண்டல் சிலை திறப்பு விழாவில் திரண்டிருந்த கூட்டத்தினரின் ஒரு பகுதி
குண்டூரில் பி.பி.மண்டல் சிலை திறப்பு விழாவில் திரண்டிருந்த கூட்டத்தினரின் ஒரு பகுதி
ஆந்திர மாநிலம் குண்டூரில் பி.பி.மண்டல் சிலையை தமிழர் தலைவர் ஆசிரியர் திறந்து வைத்தார் - 12.2.2023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக