வெள்ளி, 19 ஜூலை, 2019

போற்றத்தக்க நாத்திகர் சார்லஸ் பிராட்லா



சார்லஸ் பிராட்லா பிரிட்டனில்

மிகவும் போற்றத்தக்க நாத்திகர்.
பிரிட்டன் நாடாளுமன்றத்திற்குத்
தேர்வு செய்யப்பட்டார்.அவருக்குப்
பதவிப் பிரமாணம் செய்தபோது
கடவுளின் சாட்சியாக என்று
சொல்லி பதவிஏற்குமாறு கூறி
னார்கள்,இல்லாத கடவுளை நான்
சாட்சிக்கு அழைத்துவர முடியாது
என்றுகூறி மறுத்துவிட்டார்.உங்க
ளுக்கு நம்பிக்கை இருக்கிறதா
இல்லையா என்பதைப்பற்றி எங்க
ளுக்கு கவலையில்லை,இந்த அவை
நம்புகிறது இந்தநாட்டின் அரசியல்
சாசனம் நம்புகிறது அதற்கு கட்டுப்
பட்டவர் நீங்கள் எனவே கடவுள்
சாட்சியாக என்றுகூறித்தான் நீங்கள் பதவிப்பிரமாணம் எடுக்க
வேண்டும் அதற்கு நீங்கள் மறுப்பீர்
களேயானால் உங்கள் தேர்வு ரத்து
செய்யப்படும் என்றார்கள்.இந்த
அவையின் ஆயுள்காலம் ஐந்து
வருடங்கள்தான் இந்த ஐந்து வருடங்
களுக்காக என்ஆயுள்முழுவதும் கட்டிக் காக்கும் என்கொள்கைகளை
விட்டுவிடமுடியாது என்தேர்வை
நீங்கள் ரத்துசெய்ய விரும்பினால்
தாராளமாக நீங்கள்ரத்து செய்து
கொள்ளுங்கள் என்றார் பிராட்லா
அவர்தேர்வை ரத்துசெய்தார்கள்.
அவருடைய தொகுதிக்கு மீண்டும்
தேர்தல் நடந்தது மீண்டும் பிராட்லா
போட்டியிட்டார் மீண்டும் வெற்றி
பெற்றார் மீண்டும் அதேபிரச்சனை.
எனக்கென்று ஒருகொள்கை ஒரு
நம்பிக்கை இருக்கிறது அதை எந்தக்
காரணத்திற்காகவும் என்னால் விட்
டுத்தர இயலாது என்று திட்டவட்ட
மாக மறுத்துவிட்டார் பிராட்லா.
மீண்டும் அவர்தேர்வு ரத்து செய்யப்
பட்டது.முன்றாவது முறையாக அவர்
தொகுதிக்குத் தேர்தல் நடந்தது
மூன்றாவது முறையும் போட்டியிட்
டார் மற்ற இரண்டுமுறைை வாங்கிய வாக்குகளைவிட இம்முறை அதிகவாக்குகள் வித்தி
யாசத்தில் வெற்றிபெற்றார் பிராட்லா
இம்முறை கெஞ்ச ஆரம்பித்தார்
கள் தயவுசெய்து பிடிவாதம் பிடிக்
காமல் இந்தஅவையின் வேண்டு
கோளை ஏற்றுக்கொள்ளுங்கள்
என்றார்கள்,பிராட்லா மிகவும்
உறுதியாகச் சொன்னார் நான்யார்
என்கொள்கைகள் என்ன என்பதை
த் தெரிந்து கொண்டுதான் என்
தொகுதிமக்கள் என்னை மீண்டும்
மீண்டும் தேர்ந்தெடுக்கிறார்கள்.
என்தேர்வை ரத்துசெய்வதன் மூலமாக என்னை தேர்ந்தெடுத்த
மக்களை நீங்கள் அவமதிக்கிறீர்கள்
அவர்களுடைய ஜனநாயக உரிமை
களை இழிவு செய்கிறீர்கள் அவர்
களுடைய தன்மானத்திற்கே சவால்
விடுகிறீர்கள் என்றுகடுமைகாட்டிய
பிராட்லாஇதற்குமேல் பேச என்னி
டம் எதுவுமில்லை என்றுகூறி அமர்ந்துவிட்டார்.இந்தமுறை பிரிட்டன் பாராளுமன்றம் பணிந்தது கடவுளின்
பெயரால் பதவிஏற்பவர்கள்  கடவுளின்
பெயராலும் மனட்சாட்சியின்பெயரால்
பதவி ஏற்பவர்கள் மனசாட்சியின் பெய
ராலும் பதவிஏற்கலாம் என்று பிரிட்டன்
அரசியல் சட்டமே திருத்தப்பட்டது.
இன்று பகுத்தறிவுவாதிகள் மனட்சாட்சி
யின் பெயரால் பதவி ஏற்பதற்கு
சாரலஸ் பிராட்லாதான் காரணம்.

*மதுரை பாலன் முகநூல் பதிவுl*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக