திங்கள், 1 ஏப்ரல், 2024

அமெரிக்கா – லாஸ் ஏஞ்சல்ஸ், தென் கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் – மாணவர்கள் தமிழர் தலைவரிடம் நேர்காணல் – உறவாடல் – ஒரு தொகுப்பு (3)



விடுதலை நாளேடு
Published March 17, 2024

– வீ.குமரேசன்

நேற்றைய (16.3.2024) தொடர்ச்சி…

அரசமைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த திராவிடர் இயக்கம் பாடுபட்டு வருகிறது. ஜாதி முறை என்பது பவுதீக கட்டமைப்பு (Physical Structure) அல்ல; அது ஒரு மனநிலை – மனப்போக்கு. ஆனால் பவுதீக கட்டமைப்பை விட பலமுடன், பல ஆயிரம் ஆண்டுகளாக நிலவி வருவது. அதை ஒழித்திட, ஆதிக்க முழுமைத் தன்மையை அறியாத பல முற்போக்காளர்கள் அமைப்பு தொடங்கி – இடையில் விட்டவர்கள் பலர்; அமைப்பு தொடங்கியவர்களின் காலத்திற்கு பின்னர் தொடராதவை சில; ஆனால் நூற்றாண்டுகள் ஆகியும் தொடர் நிலையை விட இன்றைய நிலையில் வேகமாக, முழு வீச்சுடன், சமூகப் பிரச்சினையின் முழுப் பரிமாணத்தையும், முழுமை யாக உணர்ந்து, அறிந்து, செயல்பட்டு வருகிறது திராவிடர் இயக்கம்.

உலக மக்கள் சமத்துவமான வாழ்க்கை வாழ்ந்திட ‘பார்வையற்றவர்களாக’ இருக்க வேண்டும்; ஆம் நிறப் பாகுபாட்டை பார்க்க முடியாத பார்வையற்றவர்களாக’ – பாலினப் பாகுபாட்டைக் கருதாத பார்வையற்றவர் களாக’ – நிறப் பாகுபாடு என்பதே தெரியாத பார்வை யற்றவர்களாக’ இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மானுடம் உண்மையான மானுடமாக மாறும். இன் றைக்கு மனிதர்களானவர்கள் மனிதர்களாக நடத்தப்பட வில்லை. அமனிதர்கள் என்ற நிலையில் தான் உள்ளனர். அமனிதர்கள், விழிப்புணர்வு ஊட்டப்பட்டு மனிதர்களாக மாற வேண்டும். அந்தப் பணியைச் செய்வது, மனித நேயர்களான நமக்கெல்லாம் இருக் கிறது. மாநிலம் விட்டு எல்லைகளைத் தாண்டி ‘மனிதர்’ என்ற நிலையில் அனைவரும் அந்த லட்சிய எல் லையை அடைந்திட, வென்றெடுக்க அயராது பாடுபட வேண்டும்.
கேள்வி: அண்மையில் ஊடக வாயிலாகப் படிக்க நேர்ந்தது. இங்குள்ள ஒரு கோயிலில் இந்துக்கள் அல்லாதவர்கள் அங்குள்ள கொடி மரத்தினை தாண்டி கோயிலுக்குள் செல்ல உரிமை இல்லை என நீதிமன்றத் தீர்ப்பு வந்துள்ளதாக அறிகிறோம். மனிதநேய அமைப் பினரான நீங்கள் இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ஒரு கோயில் – அந்தக் கோயிலுக்கு செல்லும் மக்கள் ஒரு மதத்தைச் சார்ந்தோர் என கருதப்படுகிறது. அந்த மதம் மனிதரைப் பாகுபடுத்திப் பார்ப்பது. அதே மதத்தைச் சார்ந்த மற்ற கோயில்களில் எல்லாம் இப்படிப்பட்ட பழக்கம் உள்ளதா? கடவுள் என்பவர் உலகத்தைப் படைத்தவர், உலக மக்களைப் படைத்தார் எனக் கருதும் மதம், அனைத்து வகை மக்களும் தங்கு தடையின்றி வழிபாட்டுத் தலத்திற்கு செல்லலாம் என்பதே நியாயமானது. ஆனால் பாகுபாடு, பிரிவினை, உயர்வு – தாழ்வு ஆகியவற்றை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது மதம் என்பதே உண்மை நிலை.

‘கடவுள் எங்கும் நிறைந்தவர், கடவுள் சர்வ வல்லமை பெற்றவர், கடவுள் எல்லாம் அறிந்தவர்’ என்பது உண்மையானால், அதை மறுக்கின்ற வகையில் ஒரு குறிப்பிட்ட எல்லையில் தான் கடவுள் உள்ளார் என வரையறைப்படுத்துவது; சர்வசக்தி பெற்ற கடவுள், மதம் சாராத மக்கள் உள்ளே சென்றால் தீட்டுப்பட்டு விடுவார்; கடவுள் என்று சொன்னால் கடவுள் சக்தி மிக்கவரா? உள்ளே நுழைய விரும்பும் மக்கள் சக்தி மிக்கவர்களா?

முரண்பாடுகளின் மொத்தக் கூட்டே ‘மதம்‘ என்ப தற்கு இதைவிட என்ன எடுத்துக்காட்டு வேண்டும்? ‘கடவுளர்களால் கைவிடப்பட்ட இடம்‘ (god forsaken place) என்பதுவும் ஓர் முரண்பட்ட எடுத்துக்காட்டு.

சட்டம் என்பது விளக்கம் அளிப்பவரின வியாக்கி யானம் விளக்கத்தைப் பொறுத்த ஒன்றாக கொடுக்கப் பட்டது சரியான சட்ட விளக்கம் அல்ல. (Law is nothing but interpretaption, it is not good interpretaption)

கேள்வி: திராவிடர் என்பவர் யார்?
நல்ல கேள்வி, திராவிடர் என்பது இனவாதப் பிரிவினை அடிப்படையிலானது அல்ல; ரத்தப் பரிசோதனைகளால் அல்ல; புறத்தோற்றத்தினானதும் அல்ல; மரபணு அடிப்படையிலும் அல்ல; எதன் அடிப்படையிலானது?

பண்பாட்டு அடிப்படையிலானது ‘திராவிடர்’ அடையாளம், யாரையும் பாகுபடுத்தி, பிரித்து, தள்ளி வைத்திடும் பண்பாடு அல்ல அது. அனைவரையும் உள்ளடக்க வேண்டும் எனும் சமத்துவநிலைப் பண் பாடு. “மனிதர் அனைவரும் சமம், அனைத்தும் அனை வருக்கும்“ என்பதே அந்த பண்பாடு.
‘பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும்‘ என்பது குறள் கூறும் பண்பாடு. அதுதான் திராவிடர் பண்பாடு. பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு கிடையாது.
சமத்துவ நிலை மட்டுமல்ல; அனைவருக்கும் சம வாய்ப்பு கிட்ட வேண்டும். பொருளியல் மேம்பாடு மட்டும் போதாது. மனிதரின் தன்மானம் – சுயமரியா தையை மதித்துப் போற்றும் நிலை வர வேண்டும்.
நாடு, எல்லைகளைக் கடந்தது இந்தப் பண்பாடு. ‘திராவிடர்’ என்பது மனிதநேயம் சார்ந்தது. இந்தப் பண்பாடு மனிதர் அனைவருக்கும் சொந்தமானது. இந்தப் பண்பாட்டை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் அனை வரும் திராவிடரே.

கேள்வி: (பேராசிரியர்) என்னை நான் ‘திராவிடர்’ என அழைத்துக் கொள்ளலாமா?

ஏன் கூடாது (Why Not)? அனைவரும் சமம்; அனைத்தும் அனைவருக்கும் என்ற பண்பாட்டை ஏற்றுக் கொண்டால் அனைவரும் திராவிடரே.
நீங்கள் அமெரிக்காவில் வாழும் ‘திராவிடர்’, நாங்கள் இந்தியாவில் வாழும் ‘திராவிடர்’ – அதற்கு மானிடப்பற்றே அடிப்படை.

வாழும் இடங்கள்தான் வேறு; பண்பாடு ஒன்றுதான். பண்பாட்டு அடிப்படையில் அனைவரும் திராவிடர் கள். அனைவரும் திராவிடர்கள் அனைவரும் மனி தர்கள் என்ற நிலை வரவேண்டும். அந்த நிலைதான் தந்தை பெரியார் காண விரும்பியது, தான் 95 ஆண்டு காலம் வாழ்ந்து பாடுபட்டது. தனது காலத்திற்குப் பின் தனது இயக்கம் தொடர்ந்து எடுத்துச் செல்லப்பட வேண்டும் என நினைத்தது. பெரியார் செயல் முடிப்போம். மனிதர்களாக வாழ்வோம்.
அனைவருக்கும் நன்றி…
தென் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வுக் குழுவினருக்கு நினைவுப் பரிசாக இயக்க வெளி யீடுகளை தமிழர் தலைவர் வழங்கினார். புத்தகங்களை வழங்கிடும்பொழுது, புத்தகத்தில் உள்ள கருத்துகள் பற்றியோ, இயக்கம் குறித்து மேலும் அறிந்திட விரும் பினாலோ, தயக்கமின்றி பெரியார் திடலைத் தொடர்பு கொள்ளலாம் என தமிழர் தலைவர் தெரிவித்தார்.

நிகழ்வு முடியும் வேளையில் தமிழர் தலைவர், வருகை தந்த பேராசிரியரிடமும், மாணவர்களிடமும் தனது வயது (91) காரணமாக கேட்கப்பட்ட கேள்விகள் சிலவற்றை செவித்திறன் குறைபாடு காரணமாக மீண்டும் கேட்கப் (repeat) பணித்தது குறித்து தெரிவித்தார்.
குழுவின் தலைவர் பேராசிரியர் டியான் வின்ஸ்டன், “உங்களுக்கு 91 வயது ஆனதாகத் தெரியவில்லை; 20 வயது இளைஞரைப் போல பதில் அளித்தீர்கள்.”(You do not look 91 years old. You responded to our queries as a 20 – year old youth) என சிரித்துக் கொண்டே செல்ல அனைவரும் பேராசிரியரின் கருத் தினைக் கைதட்டி வரவேற்றனர்.

(உங்கள் தலைவருக்கு 91 வயது என சொன்னீர்கள். ‘எப்படி எங்களுடன் உரையாடுவார்? கேட்கும் கேள்விகளைப் புரிந்து கொள்ள அவரால் முடியுமா?’ என நிகழ்ச்சிக்கு முன்பாக அந்தக் குழுவின் தலை வரான பேராசிரியர் எங்களிடம் கேட்டார். சமுதாயத்தில் தடைகள் பலவற்றை தகர்த்த தலைவருக்கு வயது ஒரு தடையே அல்ல; நீங்கள் நேரிலேயே நிகழ்ச்சியின் பொழுது பார்க்கலாம் என கூறியிருந்தோம் – நாங்கள் கூறியபடியே நிகழ்ந்தது)
நிகழ்ச்சியில் பங்கேற்றோர்

நிகழ்ச்சியில் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச்செயலா ளர்கள் ச.இன்பக்கனி, ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் ஆ.வெங்கடே சன் ஆகியோர் பார்வையாளர்களாகப் பங்கேற்றனர்.

தமிழர் தலைவரிடம் நேர்காணல் நடத்திட வருகை தந்த குழுவினர் முன்னரே திராவிடர் இயக்கம் பற்றிய பல செய்திகளை படித்துத் தெரிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மகிழ்ச்சியாக தமிழர் தலைவரிடம் நன்றி தெரிவித்து விடைபெற்றனர். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் போனி தாமஸ் அவர்கள் நேர்காணல் 30 நிமிடங்களில் முடிந்துவிடும் என நினைத்திருந்தோம், 90 நிமிடங்கள் நேர்காணல் நடந்தது; நேரம் கடந்தது தெரியவில்லை. தலைவர் அளித்த கருத்துகளும், செய்திகளும் நடந்த நிகழ் வினை ஒரு முடிவாகக் கருதாமல் தங்களுக்கு ஒரு அருமையான தொடக்கமாக இருந்தது எனக்கூறி விடைபெற்றுச் சென்றார். தொடர்ந்து திராவிடர் கழகத் துடன் தொடர்பில் இருப்போம் என்று மகிழ்ச்சியுடன் கூறிச் சென்றார்.
– நிறைவு

சென்னை – பெரியார் திடலில் அமெரிக்கா – லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் தென் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் தமிழர் தலைவரைச் சந்தித்து உரையாடினர்



விடுதலை நாளேடு
Published March 10, 2024

அமெரிக்க அய்க்கிய நாடுகள் – லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தென் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்களும், ஆய்வு மாணவர்களும் நேற்று (9.3.2024) சென்னை – பெரியார் திடலுக்கு வருகை தந்தனர்.
திராவிடர் கழக தலைமையகத்தினரை ஏற்கெனவே தொடர்பு கொண்டு, திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களைச் சந்தித்து உரையாடிட உறுதி செய்திருந் தனர்.
வருகை தந்த இதழியல் தொடர்பகத் துறையின் தலைவர் பேராசிரியர் டியான் வின்ஸ்டன் (Diane Winston) தலைமையிலான ஆய்வு மாணவர்கள் (10 பேர்) திராவிடர் கழகம் மற்றும் திராவிடர் இயக்கம் பற்றி அறிந்திட தமிழர் தலைவருடன் ஒரு நேர்காணல் – கலந் துரையாடலை நடத்திட அனுமதி கோரி யிருந்தனர்.
திட்டமிட்டபடி பெரியார் திடல் – அன்னை மணியம்மையார் அரங்கில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நேர்காணல் உரையாடல்
நிகழ்ச்சியின் தொடக்கமாக தந்தை பெரியார், திராவிடர் இயக்கம், திராவிடர் கழகம் பற்றிய ஒரு சுருக்கமான உரையினை தமிழர் தலைவர் வழங்கினார். அதைத் தொடர்ந்து ஆய்வுக் குழுவின் தலைவர் பேராசிரியர் டியான் வின்ஸ்டன் அவர்கள் திராவிடர் இயக்கம் பற்றிய கேள்விகளைக் கேட்க, ஒவ்வொரு கேள்விக்கும் ஆழமான – சுருக்கமான விளக்கத்தினை தமிழர் தலைவர் எடுத்துரைத்தார். பேராசிரியரைத் தொடர்ந்து ஆய்வு மாணவர்கள் ஒவ்வொரு வரும் இந்திய சூழலில் திராவிடர் இயக்கத்தின் பணி, எதிர் கொள்ளும் அறைகூவல் பெண் உரிமை & அதிகாரத்துவம், மூடநம்பிக்கை ஒழிப்பு, திராவிட மாடல் ஆட்சி பற்றிய கேள்வி களைக் கேட்க விரிவான விளக்கத்தினை தமிழர் தலைவர் வழங்கினார்.
ஏறக்குறைய ஒண்ணே முக்கால் மணி நேரம் நடைபெற்ற நேர்காணலுக்குப் பின்னர் பேராசிரியருக்கும் ஆய்வு மாணவர்களுக்கும் தந்தை பெரியார் குறித்த – இயக்க செயல்பாடுகள், சாதனைகளைப் பற்றிய புத்தகங்களை தமிழர் தலைவர் வழங்கினார். அமெரிக்க நாட்டு பல்கலைக் கழகக் குழுவினர் நன்றி கூறி மகிழ்ச்சியினை தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், துணைச் பொதுச் செயலாளர் ச. இன்பக்கனி,
ச. பிரின்சு என்னாரெசு பெரியார், பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், ப.க. மாவட்ட செயலாளர் பா.ராமு மற்றும் பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு முன்பு தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் நினைவிடங்கள், பெரியார் பகுத்தறிவு ஆராய்ச்சி நூலகம், பெரியார் காட்சி யகம், அன்னை மணியம்மையார் மருத்துவமனை, சுயமரியாதைத் திருமண நிலையம் ஆகியவற்றைப் பார்வையிட்டு, கழகத்தின் செயல்பாடு களை அமெரிக்கப் பல்கலைக் கழக குழுவினர் கேட்டு அறிந்தனர்.

அமெரிக்கா – லாஸ் ஏஞ்சல்ஸ், தென் கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் – மாணவர்கள் தமிழர் தலைவரிடம் நேர்காணல் – உறவாடல் – ஒரு தொகுப்பு



விடுதலை நாளேடு
Published March 15, 2024

வீ.குமரேசன்

தென் கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரி யரும் – மாணவர்களும் 9.3.2024 அன்று சென்னை – பெரியார் திடலுக்கு வருகை தந்திருந்தனர். 10 ஆய்வு மாணவர்களை உள்ளடக்கி ஒரு பேராசிரியர் தலை மையில் வந்திருந்தனர். அமெரிக்கா – லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தொடர்பியல் & இதழியல் அன்னன்பெர்க் பள்ளியைச் (Annenberg School for Communication and Journalism) சார்ந்தவர்கள் அவர்கள். மாணவர்களை வழிநடத்தி வந்தவர் “ஊடகம் மற்றும் மதங்கள்” பற்றிய அமர்வின் தலைவர் (Knignt Chair in Media and Religion) பேராசிரியர் டியான் வின்ஸ்டன் (Diane Winsson) ஆவார். இவர்களை ஒருங்கிணைத்து பெரியார் திடலை முன்னமே தொடர்பு கொண்டு, அனுமதி பெற்று அழைத்து வந்தவர் கேரளாவைச் சார்ந்த இதழியலாளர் போனி தாமஸ். – வருகை தந்தோரில் பேராசிரியர் உள்பட பெண் மாணவர்கள் பெரும்பான்மையினராக இருந்தனர்.
வருகை தந்த குழுவினரை வரவேற்று திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் சற்று நேரம் அவர்களிடம் உரையாடிய பின்னர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச் செயலா ளர்கள் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், ச.இன்பக்கனி ஆகியோர் குழுவினருக்கு பெரியார் திடலைச் சுற்றிக் காண்பித்தனர்.
தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் நினைவிடங்கள், பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகம், பெரியார் காட்சியகம், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம், ‘விடுதலை’ அச்சகம், பெரியார்- மணியம்மை மருத்துவமனை, பெரியார் நூல் நிலையம் ஆகியவற்றை 30 நிமிடங்களில் சுற்றிப் பார்த்தனர். பார்த்த இடங்கள் பற்றிய சில செய்திகளை அவர்களிடம் கூறியபொழுது அமைதியாக கேட்டுக் கொண்டனர். அதிகமான விளக்கங்களைக் கேட்கவில்லை. அந்த அமைதியாகக் கேட்டுக்கொள்ளும் முறை ஓர் ஆழ மான அணுகுமுறை என்பது பேராசிரியரும், ஆய்வு மாணவர்களும் பின்னர் தமிழர் தலைவரிடம் கேட்ட கேள்விகள் மற்றும் தமிழர் தலைவர் அளித்த பதிலுக்கு, கூடுதல் விளக்கங்களைக் கேட்டுப் பெற்ற பொழுதுதான் அறிய நேர்ந்தது. புதிய இடமானாலும், திராவிடர் கழகம் குறித்தும், திராவிட இயக்கம் பற்றியும் ஏற் கெனவே படித்து அறிந்திருந்த தன்மை அவர்கள் தமிழர் தலைவரிடம் கேட்ட கேள்விகள் மூலம் வெளிப் பட்டது.

தமிழர் தலைவருடன்
சந்திப்பு – உரையாடல்
பெரியார் திடலைச் சுற்றிப் பார்த்த பின்னர் அன்னை மணியம்மையார் அரங்கிற்கு வந்து அமர்ந்தனர். வருகை தந்த தமிழர் தலைவரை முதன் முறையாக குழுவைச் சார்ந்தோர் சந்தித்தனர்.
வந்திருந்த அனைவரையும் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வரவேற்று, கழகம் பற்றிய வரலாறு, இன்றைய நிலை, எதிர்கொள் ளும் அறைகூவல்கள் பற்றிய சிறிய உரையினை வழங்கினார்.

தமிழர் தலைவரின் முன்னோட்ட உரை
தமிழர் தலைவர் தனது உரையின் தொடக்கத்தில், “இது பெரியார் மண்; பெண்களை அதிகாரப்படுத்தும் மண்” அவர்களை வரவேற்கிறது என்றார். நேர்காண லில் பேராசிரியரும், மாணவர்களும் எந்த வகையான கேள்விகளையும் தயக்கமின்றி, தவிர்த்தலின்றி கேட்கலாம் என்ற முன்னுரையோடு செய்திகளைக் குறிப்பிட்டார்.
“திராவிடர் கழகம் என்பது சமூகத்தில் உரிமை மறுக் கப்பட்டோருக்கு, அடித்தள மக்களுக்குமான இயக்க மாகும். அவர்களுக்கு மறுக்கப்பட்டதை பெற்றுத் தரு வதில் தொடர்ந்து போராடி வெற்றிகளை பெற்றுவரும் இயக்கமாகும். போராட்டமும் தொடர்கிறது; பெற வேண்டியவையும் ஏராளம் உள்ளன.

மறுக்கப்பட்டதை பெற்றுத் தருவதோடு நிறைவடை கிற இயக்கம் திராவிடர் கழகம் அல்ல; எடுத்துக்காட்டாக உழைக்கும் அடித்தள மக்களுக்கு ஆண்டாண்டு காலமாக கல்வி கற்பது மறுக்கப்பட்டு வந்தது – மறுக்கப்பட்ட கல்வியை வழங்குவதோடு மட்டுமல்லா மல் அந்த உரிமை மறுக்கப்பட்ட மக்களை அதிகாரத் தளத்தில் அமர வைத்துப் பார்க்கும் இயக்கமாகும். மறுக்கப்பட்ட வகுப்பினருக்கு கல்வி கற்பதில் இட ஒதுக்கீடு, கல்வி கற்றபின் உரிய பணியில் சேர்வதற்கும் இடஒதுக்கீடு என தொடர்நிலை போராடும் அமைப் பாகவே திராவிடர் கழகம் பாடுபட்டு வருகிறது. சமூக அநீதி மேலோங்கிய நிலை மாறி சமூகநீதி நிலவிவரும் நிலை உருவாகியுள்ளது.
சமூகநீதி என்பது மனித சமத்துவம் சார்ந்தது. மனித சமத்துவம் என்பது பாலின சமத்துவத்தையும் உள்ள டக்கியது. பாலின சமத்துவம் நிழலல்ல; நிஜம் என்கிற நிலைமைகளை கடந்த காலங்களில் நிலைநாட் டப்பட்டு வந்துள்ளது. 100 ஆண்டு கால வரலாற்றில் போராட்டங்கள், சாதனைகளைக் கண்டுள்ள அமைப்பு இது.

தேர்தலில் நேரடியாக பங்கேற்காத – போட்டியிடாத அமைப்பு திராவிடர் கழகம். கழகத்தின் பொறுப்பா ளர்களும், உறுப்பினர்களும் ஆட்சி அதிகாரம் மிக்க பொறுப்பிற்கு வர விருப்பப்படாதவர்கள். இது ஒரு சமூக இயக்கமாகும்; இதனுடைய பணி கருத்துப் பிரச்சாரம் செய்து மக்களை விழிப்படையச் செய்வது மட்டுமே. அதற்காக, மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்பதற்காகக் களப் போராட்டங்கள், மறியல் போராட்டங்கள் என சட்டத்திற்கு உட்பட்ட போராட்டங்ளை நடத்தி வருகிறது. தேவைப்பட்டால் சட்ட மீறலின்போது கைது செய்யப்படுவதற்கும் – சிறைத் தண்டனை பெறுவதற்கும் இயக்கத்தின் மூலம் ஆயத்தமாக இருப்பவர்கள் இந்த இயக்கத்தின் தோழர்கள். இவையனைத்திலும் வன்முறை என்பது சிறிதளவும் இல்லாமல் சட்டத்திற்கு மதிப்பளித்து (ஏற்றுக் கொள்வது என்பது வேறு) நடந்து கொள்ளும் இயக்கமாகும் திராவிடர் கழகம். தந்தை பெரியார் காலம் தொடங்கி, அன்னை மணியம்மயார் காலம் தொடர்ந்து எம்முடைய தலைமையில் இயக்கம் செயல்பட்டு வரும் காலத்திலும் இந்த அணுகுமுறையில் எள்ளளவும் மாற்றம் இல்லை. நூறாண்டுகளுக்கும் மேலாக சமுதாயப் பணி ஆற்றிவரும் எங்கள் இயக்கம் இன்றைக்கு நாட்டிற்கே சமூக நீதித் தளத்திலும், பிற சமுதாயப் பணிகளிலும் ஓர் எடுத்துக்காட்டு இயக்கமாக இருந்து வருகிறது.

மனிதநேயம், மனித சமத்துவம் என்பதே பெரியார் கொள்கையின் மய்யப் புள்ளி. இன்றைக்கு இந்தியாவை யும் தாண்டி உலகளாவிய அளவில் தந்தை பெரியாரு டைய மனிதநேயக் கொள்கைகளை எடுத்துச்சென்று பரப்பிடும் பணியிலும் திராவிடர் கழகம் ஈடுபட்டு வருகிறது.
இத்தகைய சமூகப் பணிகளை ஆற்றிட தேவைப் பட்ட நிதியினை தந்தை பெரியார் தனது சொத்துகளைக் கொண்டு அறக்கட்டளை அமைத்து அதன்மூலம் பயன்படுத்தி வந்தார். பெரியாரின் மறைவிற்குப் பின்னரும் அடுத்து வழிநடத்திய அன்னை மணியம் மையார், பெரியாரின் துணைவியார் என்ற நிலையில் தனக்குக் கிடைத்த சொத்தினையும் சேர்த்து தனியாக ஒரு அறக்கட்டளை அமைத்தார். இன்றைக்கும் அந்த அறக்கட்டளை மூலம் – பொது மக்களின் நன்கொடை யினையும் கொண்டு தொடக்க நிலை கல்வி நிலையங்களிலிருந்து உயர்நிலை, மேல்நிலை பள்ளிக் கல்வி, உயர் கல்வி, பல்கலைக்கழகம் என அனைத்து நிலைகளிலும் கல்விக் கூடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தக் கல்விக் கூடங்களில் பெண்கள் கல்வி என்பது முன்னுரிமை கொடுக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது.”

கேள்வி – பதில் – விளக்கம்
தமிழர் தலைவரின் இந்த முன்னோட்ட உரையினை அடுத்து போராசிரியர்களும், மாணவர்களும் கேள்வி கேட்க மற்றும் விளக்கங்கள் வேண்டிய அத்துணைக் கும் சுருக்கமாகவும், கொள்கை விளக்கமாகவும் தமிழர் தலைவர் பதிலிறுத்தார். கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்குரிய விளக்கங்களின் சுருக்கமும் பின்வருமாறு:
கேள்வி: சமுதாயத் தளத்தில் அமெரிக்க நாட்டிற்கும், இந்திய நாட்டுச் சூழலுக்கும் உள்ள நிலைமைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?
அமெரிக்காவில் மனித சமத்துவம் சட்ட ரீதியாக நிலவுகிறது. இந்தியாவில் அரசமைப்புச் சட்டம் சமத் துவ உரிமையினை வலியுறுத்தினாலும் நடைமுறையில் ஏற்றத் தாழ்வினை தூக்கிப் பிடிக்கின்ற வகையில் ஜாதிக் கட்டமைப்பு நிலவி வருகிறது. அதை எதிர்த்து மக்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்திட – பகுத்தறிவு சுயமரியாதை உணர்வினை தட்டி எழுப்பிட எங்களைப் போன்றவர்கள் பணியாற்றி வருகிறோம். அமெரிக்க நாட்டைப் பொறுத்த அளவில் பகுத்தறி வாளர் அமைப்புகள் என்பன ஒரு சிறிய அளவிலே செயல்பட்டு வருகின்றன. காரணம் ‘ஜாதி கட்டமைப்பு’ என்பது அமெரிக்காவில் இல்லை.

மத அடிப்படை யிலானது இந்த ஜாதி கட்டமைப்பு. மத உணர்வுகள் ஆழமாக சமுதாயத்தில் வேரூன்றியுள்ள நி¬லையில் அந்த ஜாதி கட்டமைப்பினை தகர்த்திட சிறிய அளவிலான இயக்கங்கள் பயன் தராது. எனவேதான் எங்களின் பகுத்தறிவு இயக்கம் ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக செயல்பட்டு வருகிறது. எங்களது இடை விடாத பணிகளின் மூலம் கடந்த நூறாண்டில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இன்னும் செய்ய வேண்டிய பணிகளும் ஏராளமாக உள்ளன. பெரும் பான்மை மக்கள் கல்வி கற்கவே தடை இருந்த நிலை யில் அறிவியல், தொழில்நுட்பத் துறையில் குறிப்பிடத் தக்க முன்னேற்றம் கண்டுள்ளோம்.
அமெரிக்காவில் இத்தகைய வளர்ச்சிக்கான தடைகள் இல்லாத நிலையில் முன்னேற்றம் என்பது பல மடங்கு நடைபெற்றுள்ளது.
கேள்வி: ‘மதம்‘ என்பது ஒரு பெரிய பிரச்சினையா?
ஆம். மதம் என்பது ஒரு மாபெரும் பிரச்சினைதான். முன்னேற்றம் காண்பதற்கு ஒரு பெரும் தடையாக மதம் நீடிக்கிறது. மதம் என்பது நம்பிக்கை சார்ந்தது. கேள்வி கேட்கும் உரிமை அதில் கிடையாது. மத உணர்வுகள் நாட்டிற்கு நாடு வேறுபடுகின்றன. ஆனால், அனைத்து மதங்களும் பெண்களை சமமாக நடத்தாததில் ஒரே விதமாக உள்ளன. சமத்துவமற்ற நிலையில் நாடுகளுக்கிடையில் வேறுபாடு இருக்கலாம். எந்த மதமும் ஆண்களுக்கு இணையாக பெண்களை நடத்துவதில்லை என்பதுதான் உண்மை நிலை.

எதையும் பகுத்தறிவு சார்ந்து வாழும் நிலையினை வரலாற்றுக் குறிப்புகளின் அடிப்படையில் மக்கள் இயக்கமாக தொடங்கியவர் புத்தர். புத்தர் கற்பித்தது ஒரு வாழ்க்கை நெறி; அதனை அவர் மதமாக நடத்திட வில்லை. ஆனால், பின்னாளில் புத்தரின் கருத்துகளும் மத வலையில் மாட்டிக் கொண்டு மத அடையாளத் துடன் இருந்து வருகிறது. இந்தியாவில் மதம் என்பது தொடக்கத்தில் “வேத மதமே”. தொடர்ந்து “பிராமண மதமாக” அறியப் பட்டது. 1863இல் அமெரிக்க நாட்டில் சிகாகோவில் நடைபெற்ற மதங்கள் பற்றிய மாநாட்டில் “பிராமண மதத்தின் பிரதிநிதியாகவே விவேகானந்தர்” கலந்து கொண்டார்.
மனிதரிடையே பாகுபாட்டை ஏற்படுத்தி அந்த பாகுபாட்டிற்கே ஒருவித ‘புனிதத் தன்மையையும்‘ இந்த மண்ணில் ஏற்படுத்திவிட்டார்கள். மதப் போர்வை யுடன் உள்ள பாகுபாட்டை அவ்வளவு எளிதில் யாரும் கேள்வி கேட்டுவிட முடியாது. பெண்களின் சமத்துவம் மதத்தில் இல்லை. கடவுளரில் பெண் கடவுளர்கள் உள்ளனர். ஆனால், பெண்களானவர்கள் கோயில் களில் – பெண் கடவுளரின் கோயிலில் கூட பெண்கள் அர்ச்சகராகும் நிலைமை இல்லை! கர்ப்பக் கிரகத்திற்கு வெளியே துதிபாடல் பாடும் ஓதுவாராக பணியமர்த் திடும் நிலைமை அண்மையில் தான் தொடங்கப்பட்டு உள்ளது. அதற்கு அடித்தளமிட்ட ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவு தந்து இந்த இயக்கம் சமுதாயப் பணியாற்றி வருகிறது.
(தொடரும்)

அமெரிக்கா – லாஸ் ஏஞ்சல்ஸ், தென் கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் – மாணவர்கள்

Published March 16, 2024

தமிழர் தலைவரிடம் நேர்காணல் – உறவாடல் – ஒரு தொகுப்பு
வீ.குமரேசன்

நேற்றைய (15.3.2024) தொடர்ச்சி…

கேள்வி: அரசானது பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 பண உதவி அளித்து வருவதாக அறிகிறோம். அதுபற்றி கூறுங்களேன்?
ஆம். தமிழ்நாட்டில் நடைபெறும் ‘திராவிட மாடல்’ ஆட்சியில் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகையாக (உதவித் தொகை அல்ல) பெண்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பெண்கள் உயர்கல்வியினை (கல்லூரி, பல்கலைக்கழகங்களில்) தொடர்ந்து மேற்கொள்ள மாதந்தோறும் ஒவ்வொருவருக்கும் ரூ.1000 வழங்கப் பட்டு வருகிறது. இந்த நிதி உதவியால் பெண்கள் உயர் கல்வி கற்பது உயர்ந்து வருகிறது.
மேலும், பெண்களுக்கு தந்தையின் சொத்தில் உரிமை என்பது இல்லா நிலையினை மாற்றிட 1929இல் தந்தை பெரியார் சுயமரியாதை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினார். அவரது கொள்கை வழியில் 1989இல் கலைஞர் முத்தமிழறிஞர் தமிழ்நாட்டின் முதலமைச் சராக இருந்தபொழுது பெண்களுக்கு சொத்துரிமைச் சட்டத்தினைக் கொண்டு வந்தார். 2006ஆம் ஆண்டு தி.மு.க. ஆதரவு பங்கேற்புடன் நடைபெற்ற அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் நாடு முழுவதற்குமான பெண்களின் சொத்துரிமைக்கான சட்டம் பிறப்பிக்கப் பட்டு நடைமுறையில் உள்ளது. பெண்களுக்கு சொத்துரிமை கூடாது என்பதில் மதம், புராணம், சாஸ்திரங்கள் பெரும் தடையாக இருந்தன. அண்ணல் அம்பேத்கரும் பெண்களுக்கு சம உரிமை வழங்கிட ‘ஹிந்து கோடு பில்’ (Hindu Code Bill) கொண்டு வர முயற்சித்த பொழுது, மதவாதிகள் கடுமையாக எதிர்த்தனர். அதை ஏற்காத அம்பேத்கரும் தனது சட்ட அமைச்சர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது. மதத் தடையை தகர்த்து பெண்களுக்கு சொத்துரிமை கிடைத்திட பாடுபட்டது திராவிடர் இயக்கம்தான்.

கேள்வி: பாலியல் சமத்துவத்திற்கு ஆதரவாக பெண் களுக்கான நலத் திட்டங்கள் பல உள்ளதாக அறிகிறோம். அவற்றைப் பற்றிய விவரங்களை அறிந்திட விரும்பு கிறோம்.
பெண்களின் உடல்நலம் பேணப்பட வேண்டும். குழந்தைப் பேறு – அளவில்லாமல் – திட்டமில்லாமல் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதால் பெண்களின் குடும்பச் சுமை அதிகரிக்கத்தான் செய்யும். 1930களிலேயே குடும்பக் கட்டுப்பாட்டை பிரச்சாரமாக செய்தவர் தந்தை பெரியார். பெண் விடுதலை நோக்கில் – குழந்தை பெற்றுக் கொள்வதை பெண்களின் சுமை, கட்டுப்பாடு என்ற வகையில்தான் பெரியார் பிரச்சாரம் செய்தார்.
“குடும்பக் கட்டுப்பாடு” செய்து கொள்ள ஆண்களைவிட பெண்கள்தான் அதிகம் முன் வருகிறார்கள்.
பெண் சிசு கொலை என்பதே பெண்களுக்கு எதிரான சமூகக் கொடுமை. பெண் கருக்கலைப்பு சட்ட விரோதமாக்க¢ப்பட்டது.
இவை அனைத்தும் பெண்களின் உடல் நலம் பேணப்பட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ஏற்பட்டன.

கேள்வி: மூடநம்பிக்கை ஒழிப்பு பற்றி உங்களது
‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ இதழில் வெளிவந்த கட்டுரையினை படிக்க நேர்ந்தது. ஆயுஷ் மருத்துவம், யோகா பற்றிய தங்களது கருத்து என்ன?
அறிவியல் பூர்வ அடிப்படையில் அல்லாத எந்த மருத்துவச் சிகிச்சையும் மனித வாழ்வுக்கு ஆபத்தான தாகும். ஆயுஷ் என்பதில் ஆயுர்வேதச் சிகிச்சையும் அடங்கும். அதில் அறுவைச் சிகிச்சைக்கு இடமே இல்லை. ஆயுர்வேதம் படித்து சிகிச்சை செய்பவர்கள் எப்படி அறுவைச் சிகிச்சையினை மேற்கொள்ள முடியும்? இவையெல்லாம் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும். இவைகளை எங்களது இயக்கம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
யோகா என்பது மத அடையாளத்துடன் பரப்பப் பட்டு வருகிறது. யோகா என்பது ஒருவித மூச்சுப் பயிற்சியே. நன்றாக மூச்சை இழுப்பதாலும், முழுமை யாக மூச்சை வெளியிடுவதுமே. மனதை ஒருமைப் படுத்துவது என்பதைத் தவிர ‘அருள்’ (spiritual) சார்ந்து எதுவும் அதில் இல்லை. உடல்நிலையைப் பேணுதல் எனும் வகையில் ஏற்றுக் கொள்ளலாம். மதத்தை பரப்பிட யோகா பயிற்றுவிப்பது எதிர்க்கப்பட வேண்டும்.

கேள்வி: இந்தியாவில் நிலவிடும் ‘ஜாதி முறை’ பற்றி விரிவாக அறிந்து கொள்ள விரும்புகிறோம்.
சமூகத்தில் ஆதிக்கத்தின் வெளிப்பாடே ஜாதி முறைதான். பிறப்பால் மனிதரை உயர்வு-தாழ்வு கற்பித்து அதை கடவுள் விதித்த விதி என மக்களை நம்ப வைத்து விட்டனர் மதவாதிகள். அடக்கப்பட்டுக் கிடப்பதே – அழுத்தப்பட்டுக் கிடப்பதே – உரிமை மறுக்கப்பட்டு இருப்பதே தமக்கு விதிக்கப்பட்ட ‘தலைவிதி’ என இருந்து வந்தனர். சிலர் அந்த அடக்குமுறையை – அடிமைத்தனத்தை கொண்டா டவும் செய்தனர். ஜாதியை சுட்டிக்காட்டி கல்வி மறுக்கப்பட்டது. குலத் தொழிலைத்தான் செய்திட வேண்டும் எனும் சமூக விதி இருந்தது. இவை அனைத்திற்கும் ‘மதம்‘ பாதுகாப்பு அளித்து வந்தது.

உழைக்கும் மக்களின் உரிமைக்காக, உயர்வுக்காக பல சீர்திருத்த இயக்கங்கள் தோன்றினாலும், தொடங் கப்பட்டு 100 ஆண்டுகள் ஆன நிலையிலும் தொடர்ந்து எழுச்சியுடன் செயல்பட்டு வருவது திராவிடர் இயக்கம் தான்.
100 ஆண்டு கால ஏற்றத்தை, ஏற்பட்ட சமத்துவத்தை பின்னுக்கு இழுக்கின்ற வகையில் ஒன்றியத்தில் ஆட்சி யில் இருப்போர் திட்டங்களை தீட்டி நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். எந்த ‘ஜாதி’ அடையாளத்தை வைத்து உரிமை மறுக்கப்பட்டதோ – அந்த அடையாளத்தைக் காட்டித்தான் உரிமை பெற வேண்டும். அதற்கான வழிமுறைதான் இடஒதுக்கீடு. சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட மக்களை, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களை இடஒதுக்கீடு வழிமுறை சமத்துவ நிலைக்கு எடுத்துச் செல்லும். இதற்காக திராவிடர் இயக்கம் 1921ஆம் ஆண்டிலேயே (பிரிட்டிஷ் ஆட்சியின் பொழுதே) கம்யூனல் ஜி.ஓ. (Communal G.O.) கொண்டு வந்தனர். விடுதலை பெற்ற இந்தியாவில் இடஒதுக்கீட்டிற்கு நீதிமன்றத் தீர்ப்புகளின் மூலமாக ஆபத்து வந்த நிலையில் மக்களைத் திரட்டி போராடி இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தத்தை கொண்டு வரச் செய்து, இடஒதுக்கீடு தொடர்ந்திட தந்தை பெரியார் காரணமாக இருந்தார். அவர் காட்டும் வழியில் இடஒதுக்கீடு வழிமுறையில் பற்பல ஏற்றங்களைக் கொண்டு இன்றைக்கு தமிழ்நாடு மாநிலம் நாட்டிற்கே எடுத்துக் காட்டாக – வழிகாட்டியாக விளங்கிக் கொண்டு இருக் கிறது. இவையனைத்திற்கும் திராவிடர் இயக்கம்தான் முக்கிய காரணமாகும்.

இன்னும் சமத்துவத்திற்கான நிலை முழுமையடைய வில்லை. இடஒதுக்கீட்டால் பயன் பெறாதோர் பலர் உள்ளனர். பல ஜாதியினர் உள்ளனர். அது பற்றிய விவரங்களை அறிய ஜாதிக் கணக்கு (Caste Census) மேற்கொள்வது மிக அவசியம். ஒரு மனித உடலின் ஆரோக்கியத் தன்மை – நோய்த்தாக்கம் பற்றி தெரிந்திட ‘ஸ்கேன்’ எடுப்பது மருத்துவ வழி முறை. ஜாதிக் கணக்கு மேற்கொள்வது சமூகத்தை ஸ்கேன் செய்வது போன்றதே. நாடு தழுவிய ஜாதிக் கணக்கு மேற்கொள்ளப்பட்டு, யாருக்கு எப்படி, எவ்வளவு இடஒதுக்கீடு என அளிப்பது தான் நியாயமான செயலாகும். அதற்காக வலிந்து குரல் கொடுத்து வருகிறது திராவிடர் இயக்கம். ஆனால் ஒன்றிய அரசில் உள்ள கட்சியினர் ‘ஜாதிக் கணக்கு’ மேற் கொள்வதற்கு எதிர்ப்பாக உள்ளனர்.

இந்த எதிர்ப்பானது ‘ஜாதி முறை’, உயர்வு – தாழ்வு தொடர வேண்டும் என்ற அவர்களின் நிலைப்பாட்டை பறைசாற்றுவதாக உள்ளது. இப்படிப்பட்ட அரசியல், சமூகச் சூழலை மாற்றிடுவதுதான் எங்களது – எங்களின் இயக்கத்தின் பணி. வெற்றி – தோல்வி பற்றிய கண் ணோட்டம் இல்லாமல், சமூக சமத்துவத்திற்கு ‘ஜாதி முறை’யை ஒழிப்புதான் ஒரே வழி என திராவிடர் இயக்கம் பாடுபட்டு வருகிறது.
கேள்வி: அமெரிக்காவில் நிறப்பாகுபாடு உள்ளது. இந்தியாவில் ஜாதிப் பாகுபாடு உள்ளது. இரண்டிற்கும் என்ன வேறுபாடு?
இரண்டு வகைப் பாகுபாடுகளும் பிறப்பின் அடிப் படையில் வண்ண அடிப்படைகளில் ஆனவையே. அமெரிக்காவில் நிலவிடும் வெள்ளையர் – கறுப்பின மக்கள் என பாகுபாடு நிலவி வந்தாலும் ஒடுக்கப்பட்ட கறுப்பின மக்களுக்கு கல்வி மறுக்கப்படவில்லை. வெள்ளையர்களின் நிலைப்பாடு என்பது கறுப்பர்கள் தனியாக கல்வி கற்கலாம். தங்களுடன் சேர்ந்து கல்வி கற்கத் தேவையில்லை என்பதுதான். அந்த நிலைமை களும் இன்றைக்கு மாறி வந்துள்ளன.

ஆனால் இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களை ‘சூத்திரர்கள்’ (உழைக்கும் மக்கள்) கல்வியே கற்கக் கூடாது. கல்வி கற்பது ஒரு ஜாதியினருக்கே உரித்தானது. மறுக்கப்பட்டோர் கல்வி கற்றால் தண்டனைக்கு ஆளாக்கப்பட வேண்டும். கல்வி கற்பதை அருகில் இருந்து கேட்டுக் கெண்டிருந்தால், அவர்களது காதில் காய்ச்சிய ஈய உலோகத்தை ஊற்ற வேண்டும். கல்வி கற்று உச்சரித்தால் – அந்த உச்சரித்த நாக்கு வெட்டப்பட வேண்டும் என கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வந்தது. இவை அனைத்திற்கும் மதம், கடவுள் பாதுகாவலர்கள் என ஆதிக்கவாதிகள் ஏற்படுத்தி விட்டனர்.

நிறப்பாகுபாடைவிட ஜாதிப் பாகுபாடு கொடுமையானது (Caste discrimination is worse than discrimination by Colour) அமெரிக்காவில் வெள்ளையரும், கருப்பினமக்களும் சமம்; ஆனால் சேரக் கூடாது, தனியேதான் இருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. இந்தியாவில் அனைவரும் சமமில்லை. ஜாதி அடிப்படையில் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்பது நடைமுறை. இந்திய அரசமைப்புச் சட்டம், இந்திய குடிமக்களில் உடல், நிறம், ஜாதி, பிறப்பிடம் என எந்த வகையிலும் பாகுபாடு காட்டப்படக் கூடாது என கூறுகிறது. ஆனால் நடைமுறையில் பாகுபாடற்ற நிலை முழுமையாக வரவில்லை.
(தொடரும்)
நேற்றைய (16.3.2024) தொடர்ச்சி…
அரசமைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த திராவிடர் இயக்கம் பாடுபட்டு வருகிறது. ஜாதி முறை என்பது பவுதீக கட்டமைப்பு (றிலீஹ்sவீநீணீறீ ஷிtக்ஷீuநீtuக்ஷீமீ) அல்ல; அது ஒரு மனநிலை – மனப்போக்கு. ஆனால் பவுதீக கட்டமைப்பை விட பலமுடன், பல ஆயிரம் ஆண்டுகளாக நிலவி வருவது. அதை ஒழித்திட, ஆதிக்க முழுமைத் தன்மையை அறியாத பல முற்போக்காளர்கள் அமைப்பு தொடங்கி – இடையில் விட்டவர்கள் பலர்; அமைப்பு தொடங்கியவர்களின் காலத்திற்கு பின்னர் தொடராதவை சில; ஆனால் நூற்றாண்டுகள் ஆகியும் தொடர் நிலையை விட இன்றைய நிலையில் வேகமாக, முழு வீச்சுடன், சமூகப் பிரச்சினையின் முழுப் பரிமாணத்தையும், முழுமை யாக உணர்ந்து, அறிந்து, செயல்பட்டு வருகிறது திராவிடர் இயக்கம்.
உலக மக்கள் சமத்துவமான வாழ்க்கை வாழ்ந்திட ‘பார்வையற்றவர்களாக’ இருக்க வேண்டும்; ஆம் நிறப் பாகுபாட்டை பார்க்க முடியாத பார்வையற்றவர்களாக’ – பாலினப் பாகுபாட்டைக் கருதாத பார்வையற்றவர் களாக’ – நிறப் பாகுபாடு என்பதே தெரியாத பார்வை யற்றவர்களாக’ இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மானுடம் உண்மையான மானுடமாக மாறும். இன் றைக்கு மனிதர்களானவர்கள் மனிதர்களாக நடத்தப்பட வில்லை. அமனிதர்கள் என்ற நிலையில் தான் உள்ளனர். அமனிதர்கள், விழிப்புணர்வு ஊட்டப்பட்டு மனிதர்களாக மாற வேண்டும். அந்தப் பணியைச் செய்வது, மனித நேயர்களான நமக்கெல்லாம் இருக் கிறது. மாநிலம் விட்டு எல்லைகளைத் தாண்டி ‘மனிதர்’ என்ற நிலையில் அனைவரும் அந்த லட்சிய எல் லையை அடைந்திட, வென்றெடுக்க அயராது பாடுபட வேண்டும்.
கேள்வி: அண்மையில் ஊடக வாயிலாகப் படிக்க நேர்ந்தது. இங்குள்ள ஒரு கோயிலில் இந்துக்கள் அல்லாதவர்கள் அங்குள்ள கொடி மரத்தினை தாண்டி கோயிலுக்குள் செல்ல உரிமை இல்லை என நீதிமன்றத் தீர்ப்பு வந்துள்ளதாக அறிகிறோம். மனிதநேய அமைப் பினரான நீங்கள் இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ஒரு கோயில் – அந்தக் கோயிலுக்கு செல்லும் மக்கள் ஒரு மதத்தைச் சார்ந்தோர் என கருதப்படுகிறது. அந்த மதம் மனிதரைப் பாகுபடுத்திப் பார்ப்பது. அதே மதத்தைச் சார்ந்த மற்ற கோயில்களில் எல்லாம் இப்படிப்பட்ட பழக்கம் உள்ளதா? கடவுள் என்பவர் உலகத்தைப் படைத்தவர், உலக மக்களைப் படைத்தார் எனக் கருதும் மதம், அனைத்து வகை மக்களும் தங்கு தடையின்றி வழிபாட்டுத் தலத்திற்கு செல்லலாம் என்பதே நியாயமானது. ஆனால் பாகுபாடு, பிரிவினை, உயர்வு – தாழ்வு ஆகியவற்றை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது மதம் என்பதே உண்மை நிலை.
‘கடவுள் எங்கும் நிறைந்தவர், கடவுள் சர்வ வல்லமை பெற்றவர், கடவுள் எல்லாம் அறிந்தவர்’ என்பது உண்மையானால், அதை மறுக்கின்ற வகையில் ஒரு குறிப்பிட்ட எல்லையில் தான் கடவுள் உள்ளார் என வரையறைப்படுத்துவது; சர்வசக்தி பெற்ற கடவுள், மதம் சாராத மக்கள் உள்ளே சென்றால் தீட்டுப்பட்டு விடுவார்; கடவுள் என்று சொன்னால் கடவுள் சக்தி மிக்கவரா? உள்ளே நுழைய விரும்பும் மக்கள் சக்தி மிக்கவர்களா?
முரண்பாடுகளின் மொத்தக் கூட்டே ‘மதம்‘ என்ப தற்கு இதைவிட என்ன எடுத்துக்காட்டு வேண்டும்? ‘கடவுளர்களால் கைவிடப்பட்ட இடம்‘ (ரீஷீபீ யீஷீக்ஷீsணீளீமீஸீ ஜீறீணீநீமீ) என்பதுவும் ஓர் முரண்பட்ட எடுத்துக்காட்டு.
சட்டம் என்பது விளக்கம் அளிப்பவரின வியாக்கி யானம் விளக்கத்தைப் பொறுத்த ஒன்றாக கொடுக்கப் பட்டது சரியான சட்ட விளக்கம் அல்ல. (லிணீஷ் வீs ஸீஷீtலீவீஸீரீ தீut வீஸீtமீக்ஷீஜீக்ஷீமீஜீtவீஷீஸீ, வீt வீs ஸீஷீt ரீஷீஷீபீ வீஸீtமீக்ஷீஜீக்ஷீமீஜீtவீஷீஸீ)
கேள்வி: திராவிடர் என்பவர் யார்?
நல்ல கேள்வி, திராவிடர் என்பது இனவாதப் பிரிவினை அடிப்படையிலானது அல்ல; ரத்தப் பரிசோதனைகளால் அல்ல; புறத்தோற்றத்தினானதும் அல்ல; மரபணு அடிப்படையிலும் அல்ல; எதன் அடிப்படையிலானது?
பண்பாட்டு அடிப்படையிலானது ‘திராவிடர்’ அடையாளம், யாரையும் பாகுபடுத்தி, பிரித்து, தள்ளி வைத்திடும் பண்பாடு அல்ல அது. அனைவரையும் உள்ளடக்க வேண்டும் எனும் சமத்துவநிலைப் பண் பாடு. “மனிதர் அனைவரும் சமம், அனைத்தும் அனை வருக்கும்“ என்பதே அந்த பண்பாடு.
‘பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும்‘ என்பது குறள் கூறும் பண்பாடு. அதுதான் திராவிடர் பண்பாடு. பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு கிடையாது.
சமத்துவ நிலை மட்டுமல்ல; அனைவருக்கும் சம வாய்ப்பு கிட்ட வேண்டும். பொருளியல் மேம்பாடு மட்டும் போதாது. மனிதரின் தன்மானம் – சுயமரியா தையை மதித்துப் போற்றும் நிலை வர வேண்டும்.
நாடு, எல்லைகளைக் கடந்தது இந்தப் பண்பாடு. ‘திராவிடர்’ என்பது மனிதநேயம் சார்ந்தது. இந்தப் பண்பாடு மனிதர் அனைவருக்கும் சொந்தமானது. இந்தப் பண்பாட்டை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் அனை வரும் திராவிடரே.
கேள்வி: (பேராசிரியர்) என்னை நான் ‘திராவிடர்’ என அழைத்துக் கொள்ளலாமா?
ஏன் கூடாது (கீலீஹ் ழிஷீt)? அனைவரும் சமம்; அனைத்தும் அனைவருக்கும் என்ற பண்பாட்டை ஏற்றுக் கொண்டால் அனைவரும் திராவிடரே.
நீங்கள் அமெரிக்காவில் வாழும் ‘திராவிடர்’, நாங்கள் இந்தியாவில் வாழும் ‘திராவிடர்’ – அதற்கு மானிப்பற்றே அடிப்படை.
வாழும் இடங்கள்தான் வேறு; பண்பாடு ஒன்றுதான். பண்பாட்டு அடிப்படையில் அனைவரும் திராவிடர் கள். அனைவரும் திராவிடர்கள் அனைவரும் மனி தர்கள் என்ற நிலை வரவேண்டும். அந்த நிலைதான் தந்தை பெரியார் காண விரும்பியது, தான் 95 ஆண்டு காலம் வாழ்ந்து பாடுபட்டது. தனது காலத்திற்குப் பின் தனது இயக்கம் தொடர்ந்து எடுத்துச் செல்லப்பட வேண்டும் என நினைத்தது. பெரியார் செயல் முடிப்போம். மனிதர்களாக வாழ்வோம்.
அனைவருக்கும் நன்றி…
தென் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வுக் குழுவினருக்கு நினைவுப் பரிசாக இயக்க வெளி யீடுகளை தமிழர் தலைவர் வழங்கினார். புத்தகங்களை வழங்கிடும்பொழுது, புத்தகத்தில் உள்ள கருத்துகள் பற்றியோ, இயக்கம் குறித்து மேலும் அறிந்திட விரும் பினாலோ, தயக்கமின்றி பெரியார் திடலைத் தொடர்பு கொள்ளலாம் என தமிழர் தலைவர் தெரிவித்தார்.
நிகழ்வு முடியும் வேளையில் தமிழர் தலைவர், வருகை தந்த பேராசிரியரிடமும், மாணவர்களிடமும் தனது வயது (91) காரணமாக கேட்கப்பட்ட கேள்விகள் சிலவற்றை செவித்திறன் குறைபாடு காரணமாக மீண்டும் கேட்கப் (க்ஷீமீஜீமீணீt) பணித்தது குறித்து தெரிவித்தார்.
குழுவின் தலைவர் பேராசிரியர் டியான் வின்ஸ்டன், “உங்களுக்கு 91 வயது ஆனதாகத் தெரியவில்லை; 20 வயது இளைஞரைப் போல பதில் அளித்தீர்கள்.” (சீஷீu பீஷீ ஸீஷீt றீஷீஷீளீ 91 ஹ்மீணீக்ஷீs ஷீறீபீ. சீஷீu க்ஷீமீsஜீஷீஸீபீமீபீ tஷீ ஷீuக்ஷீ ஹீuமீக்ஷீவீமீs ணீs ணீ 20 – ஹ்மீணீக்ஷீ ஷீறீபீ ஹ்ஷீutலீ) என சிரித்துக் கொண்டே செல்ல அனைவரும் பேராசிரியரின் கருத் தினைக் கைதட்டி வரவேற்றனர்.
(உங்கள் தலைவருக்கு 91 வயது என சொன்னீர்கள். ‘எப்படி எங்களுடன் உரையாடுவார்? கேட்கும் கேள்விகளைப் புரிந்து கொள்ள அவரால் முடியுமா?’ என நிகழ்ச்சிக்கு முன்பாக அந்தக் குழுவின் தலை வரான பேராசிரியர் எங்களிடம் கேட்டார். சமுதாயத்தில் தடைகள் பலவற்றை தகர்த்த தலைவருக்கு வயது ஒரு தடையே அல்ல; நீங்கள் நேரிலேயே நிகழ்ச்சியின் பொழுது பார்க்கலாம் என கூறியிருந்தோம் – நாங்கள் கூறியபடியே நிகழ்ந்தது)
நிகழ்ச்சியில் பங்கேற்றோர்
நிகழ்ச்சியில் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச்செயலா ளர்கள் ச.இன்பக்கனி, பிரின்ஸ் என்னாரெசு பெரியார், பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வெங்கடே சன் ஆகியோர் பார்வையாளர்களாகப் பங்கேற்றனர்.
தமிழர் தலைவரிடம் நேர்காணல் நடத்தியதை முன்னர் திராவிடர் இயக்கம் பற்றிய பல செய்திகளை வருகை தந்த குழுவினர் படித்துத் தெரிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மகிழ்ச்சியாக தமிழர் தலைவரிடம் நன்றி தெரிவித்து விடைபெற்றனர். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் போனி தாமஸ் அவர்கள் நேர்காணல் 30 நிமிடங்களில் முடிந்துவிடும் என நினைத்திருந்தோம், 90 நிமிடங்கள் நேர்காணல் நடந்தது; நேரம் கடந்தது தெரியவில்லை. தலைவர் அளித்த கருத்துகளும், செய்திகளும் நடந்த நிகழ் வினை ஒரு முடிவாகக் கருதாமல் தங்களுக்கு ஒரு அருமையான தொடக்கமாக இருந்தது எனக்கூறி விடைபெற்றுச் சென்றார். தொடர்ந்து திராவிடர் கழகத் துடன் தொடர்பில் இருப்போம் என்று மகிழ்ச்சியுடன் கூறிச் சென்றார்.

வியாழன், 14 மார்ச், 2024

பெங்களூருவில் தேசிய அறிவியல் நாள் மாநாடு

 



தந்தை பெரியாரின் பகுத்தறிவு  பெண்ணுரிமை குறித்து துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் உரை

பெங்களூரு, மார்ச் 8- தேசிய அறிவியல் நாளையொட்டி கடந்த பிப்ரவரி 28 அன்று கருநாடகத் தலைநகர் பெங்களூரில் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பும், நெகிலா யோகி டிரஸ்டின் மானவ பந்துத்வா வேதிகே மற்றும் அகில கருநாடக விசார வாதிகளா டிரஸ்ட் ஆகிய அமைப்புகள் இணைந்து ஒரு நாள் மாநாடு ஒன்றை நடத்தின.
பெங்களூரு குமார பூங்கா கிழக்கிலுள்ள காந்தி பவன் மகாதேவ தேசாய் அரங்கில் காலை 10 மணியளவில் மாநாடு தொடங் கியது. புகழ்பெற்ற எழுத்தாளரும், கருநாடகா சாஹித்ய அகாடமியின் தலைவராக இருந் தவருமான அக்ரஹாரா கிருஷ்ணமூர்த்தி, பொதுப்பணித் துறை அமைச்சர் சத்தீஷ் ககோலி மாநாட்டைத் தொடங்கி வைத்தனர். இந்தியப் பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட் டமைப்புத் தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக், நெகிலா யோகி டிரஸ்ட் தலைவர் பேராசிரியர் ஹெ.ஆர்.சுவாமி, பகுத்தறி வாளர் சங்கத் தலைவர் நடேகர் உள்ளிட்ட பெருமக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், சாவித்திரி பாய் பூலே, ஜவகர் லால் நேரு ஆகியோரின் படங்கள் அடங்கிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. காலை முதலே பேராசிரியர்கள், மாணவர்கள், எழுத் தாளர்களால் அரங்கம் நிரம்பி வழிந்தது.
காலையில் நடந்த தொடக்க விழாவுக்குப் பிறகு, மதிய உணவு அனைவருக்கும் வழங் கப்பட்டது. காலை முதலே நிகழ்ச்சிகளின் இடையில் புரட்சிகரமான பகுத்தறிவுக் கருத்துகளையும், ஒடுக்கப்பட்டோர் உரிமை களையும் முன்னிறுத்தும் பாடல்களை வெவ் வேறு குழுவினரும் தொடர்ந்து இசைத்தனர்.

மதியம் முதல் அமர்வாக தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனையும், பெண்ணுரிமையும் என்ற தலைப்பிலான இரண்டாம் அமர்வு தொடங்கியது. திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் உரை நிகழ்த்தினார்.
45 நிமிடங்கள் உரையும், அதனைத் தொடர்ந்து கேள்வி-பதிலுமாக அந்த அமர்வு நடந்தது. இயல்பாக குழந்தைப் பருவம் முதலே எழுந்த பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனை, அவரது கேள்வி கேட்கும் மனப் பான்மை, அதையே ஓர் இயக்கமாக அவர் மாற்றிய பாங்கு ஆகியன குறித்து எடுத்து ரைத்தார். பெரியாரின் பெண்ணியம் எப்படி தனித்தன்மையானது என்பதையும், அதைத் தன்னுடைய குடும்பத்திலிருந்து தொடங்கி, எப்படி நடைமுறைப்படுத்தினார் என்பதை யும் தன்னுடைய உரையில் குறிப்பிட்டார்.

ஆங்கிலத்தில் அமைந்த உரைக்கு, கன்னட மொழியிலேயே தயாரிக்கப்பட்டிருந்த விவரக் குறிப்புகளின் திரையிடல் அவர்கள் புரிந்து கொள்ளவும் எளிமையாக அமைந் தது. இந்த அமர்வை வரலாற்றுப் பேராசிரியர் மஞ்சுநாத் ஒருங்கிணைத்தார். அமர்வுக்கு, பகுத்தறிவுச் சிந்தனையாளரும், மறைந்த எழுத்தாளருமான பெரியார் பெருந் தொண் டர் வேமண்ணா அவர்களின் மகன் பாவேந் தன் தலைமை ஏற்றார். கேள்வி-பதில் பகுதி யில் தந்தை பெரியார் குறித்தும், திராவிடர் கழகத்தின் செயல்பாடுகள் குறித்தும் எழுப் பப்பட்ட கேள்விகளுக்கு ச. பிரின்சு என்னா ரெசு பெரியார் பதிலளித்தார்.

உரைக்குப் பின்னரும் பல்வேறு அமைப் பினரும், தோழர்களும் பேரார்வத்துடன் வந்து தந்தை பெரியார் பற்றிய செய்திகளை அறிந்து கொள்ள விழைந்தனர். அடுத்தடுத்த அமர்வுகளில் சாவித்திரி பாய் பூலே பற்றி மகாராட்டிர அந்தர் ஸ்ரத்த நிர்மூலன் சமிதியின் டாக்டர் சவிதா ஷேத், ஜவகர்லால் நேரு பற்றி ஆய்வாளர் டாக்டர் பிரதீப் மால்குடி ஆகியோரும், நவீன மருத்துவ வளர்ச்சி – பகுத்தறிவுப் பார்வையில் என்ற தலைப்பில் பேராசிரியர் நரேந்திர நாயக் ஆகியோரும் உரையாற்றினர்.




 நரேந்திர நாயக் ஆகியோரும் உரையாற்றினர்.

வெள்ளி, 8 மார்ச், 2024

கேரள யுக்திவாதி சங்கத்தின் முன்னோடி யு.கலாநாதன் மறைவு தமிழர் தலைவர் இரங்கல் – வீர வணக்கம்




Published March 7, 2024, விடுதலை நாளேடு

கேரள மாநிலத்தில் மக்கள் இயக்கமாகச் செயல்பட்டு வரும் கேரள யுக்திவாதி சங்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான யு.கலாநாதன் (வயது 84) மலப்புரம் மாவட் டம் வல்லிக் குன்னத்தில் நேற்று (6.3.2024) இரவு மறை வுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

பகுத்தறிவாளர் கழகம் நடத்திய பல மாநாடு களிலும், கூட்டங்களிலும் பங்கேற்றவர். எம்முடனும், பெரியார் இயக்கத் தோழர்களுடனும் அன்புடன் பழகியவர். இந்திய பகுத்தறிவாளர் சங்கக் கூட்ட மைப்பின் பொதுச் செயலாளராக திறம்பட பணியாற் றியவராவார். கேரள யுக்திவாதி சங்க மாநாட்டில் பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களையும் என்னையும் அழைத்து பங்கேற்கச் செய்தவர்.

அரசியலிலிருந்து மதத்தை முழுமையாகப் பிரித்திட வேண்டும் என்பதை கொள்கைப் பிரச் சாரமாக, இயக்கமாகக் கட்டியமைக்கப் பாடுபட்டவர். இதுகுறித்து டில்லியில் – ஜந்தர் மந்தரில் அவர் நடத்திய ஆர்ப்பாட்டங்களில் பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
வயது முதுமை சார்ந்த உடல் உபாதைகள் காரணமாக, சில ஆண்டுகளாக வெளியூர் பயணத்தைத் தவிர்த்து வந்த நிலையிலும், இறுதி வரை பகுத்தறிவாளராக, மனிதநேயக் கொள்கைக் காகவே வாழ்ந்த பெருமகனார் ஆவார். கலாநாதன் அவர்களின் மறைவு இந்திய பகுத்தறிவாளர் இயக்கத்திற்கு பேரிழப்பு.
கலாநாதன் அவர்களை, மனைவி திருமதி ஷோபனா, மகன் சமீர் ஆகியோர் இறுதிவரை கவனித்து வந்தனர். உடலை மருத்துவக் கல்லூரிக்கு அளிப்பது பாராட்டத்தகுந்தது.
மறைவுற்ற யு.கலாநாதன் அவர்களுக்கு பகுத் தறிவாளர் கழகம் வீரவணக்கத்தைச் செலுத்துகிறது. அவரது மறைவிற்கு குடும்பத்தாருக்கும், கேரள யுக்திவாதி சங்கத்தாருக்கும், ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவருக்கு நமது வீர வணக்கம்.

வாழ்க பகுத்தறிவாளர் கலாநாதன்!
வளர்க அவர் தொடர்ந்த பணிகள்!

கி.வீரமணி
புரவலர்,
பகுத்தறிவாளர் கழகம்

சென்னை
7.3.2024 

குறிப்பு: மறைவுற்ற கலாநாதனின் உடல் இன்று (7.3.2024) பிற்பகல் கோழிக்கோட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரது விருப்பப்படி கொடையாக வழங்கப்பட உள்ளது.

‘ஸநாதன’க் கல்விக் கொள்கையை ஒழிப்போம்! மேற்கு வங்கம் – கொல்கத்தாவில் நடைபெற்ற மாணவர் எழுச்சிப் பேரணியில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் எழுச்சியுரை




 ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற மோடியின் கியாரண்டி என்ன ஆயிற்று?

நாங்கள் ஆர்.எஸ்.எஸ்., மோடி குடும்பம் அல்ல; சமத்துவம் பேசும் திராவிடக் குடும்பம்!

கொல்கத்தா,மார்ச் 8- இந்தியாவின் முதன்மையான
15 மாணவர் அமைப்புகள் இணைந்து உருவாக்கிய இந்திய மாணவர் அய்க்கியம் (United Students of India) சார்பில் கொல்கத்தா பேரணியும், பொதுக்கூட்டமும் 06.03.2024 புதன்கிழமை பிற்பகல் 12 மணி முதல் 4 மணி வரை நடைபெற்றது.
கொல்கத்தாவைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து மாணவர்கள் காலை முதலே திரளத் தொடங்கினர். மேற்கு வங்காளத்தில் எஸ்.எப்.அய், ஏ.அய்.எஸ்.எப், பி.எஸ்.யூ ஆகிய அமைப்புகள் இப் பேரணியை ஒருங்கிணைத்தன.
தமிழ்நாட்டிலிருந்து திராவிடர் கழகத்தின் சார்பில் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், வழக்குரைஞர் முகமது அஃப்ரிடி ஆகியோரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அதன் மாணவர் அணி இணைச் செயலாளர் வழக்குரைஞர் பூவை ஜெரால்டு, உசிலம்பட்டி வழக்குரைஞர் மகிழன் ஆகியோரும், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தேசியச் செயலாலர் சீ.தினேஷ் ஆகியோரும் பங்கேற்றனர்.

ஹவுரா நிலையம் மற்றும் சேல்தா நிலையம் ஆகிய இருவேறு பகுதிகளிலிருந்து ஒரே நேரத்தில் பேரணி புறப்பட்டு, கொல்கத்தாவின் வெகு மக்கள் கூடும் பகுதிகளில் ஒன்றான கல்லூரித் தெருவில் ஒன்று சேர்ந்தது. அந்தத் தெருவில் தான் கொல்கத்தா பல்கலைக்கழகம், பிரசிடென்சி கல்லூரி, ஹேர் பள்ளி உள்ளிட்ட ஏராளமான கல்வி நிலையங்கள் உள்ளன. சேல்தா மெட்ரோ நிலையத்திலிருந்து தொடங்கிய பேரணியில் கழகக் கொடி ஏந்தி வந்த திராவிட மாணவர் கழகத் தோழர்கள் ஆங்கிலத்தில் பதாகையை ஏந்தி, முழக்கம் எழுப்பியபடி பங்கேற்றனர்.
இந்திய மாணவர் சங்கத்தின் தேசியப் பொதுச் செயலாளர் மாயுக் பிஸ்வாஸ், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மாணவர் அணிச் செயலாளர் பிரியங்கா, பி.எஸ்.யூ செயலாலர் நவ்ஃபல் சஃபியுல்லா, ஜே.என்.யூ மாணவர் தீப்ஷிதா, இந்திய மாணவர் சங்க மேற்கு வங்க மாநிலச் செயலாளர் தேபான்ஞ்சன் தே, தலைவர் பிரனாய் காஜி, மற்றும் பிகார், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்தும் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தேசியக் கல்விக் கொள்கை, பாஜகவை எதிர்த்தும், கல்வி உரிமைக்காகவும் இந்தியிலும், வங்காளத்திலும் முழக்கங் களை எழுப்பினர்.
பேரணியின் முடிவில் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் வாயிலில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் மாணவர் தலைவர்களின் உரைவீச்சு தொடங்கியது.

கழகத் துணைப் பொதுச் செயலாளர்
ச.பிரின்சு என்னாரெசு பெரியார் உரை
கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியாரின் உரை வருமாறு:
“சமூகநீதி மண்ணாம், தமிழ்நாட்டில் தந்தை பெரியார் மண்ணிலிருந்து இந்நிகழ்வில் பங்கேற்றிருக்கிறோம். சிறப் பான இந்த மாணவர் பேரணிக்கு எங்கள் தலைவர் டாக்டர் வீரமணி அவர்கள் வாழ்த்தி அனுப்பியிருக்கிறார்கள். நமக்குத் தெரியும் இதே நகரத்தின் இன்னொரு மூலையில் நரேந்திர மோடி பேசிக் கொண்டிருக்கிறார். நாள்தோறும் நாளேடுகளிலும், தொலைக்காட்சிகளிலும், தெருக்களிலும் “மோடி கா கியாரண்டி” என்ற விளம்பர வாசகங்களைப் பார்க்கிறோம். மோடி அவர்களே, நீங்கள் இதுவரை வழங்கிய உத்தரவாதங்கள் எங்கே போயின என்று கேட்கிறோம்.

ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்ற உறுதிமொழி என்ன ஆயிற்று?
பாஜகவின் நச்சு விதைகள் முளைக்காத மண்ணில், சில கழிவுகளை இட்டாவது உரமாக்கலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள். பாஜக சார்பில் யார் யாரையோ களம் இறக்குகிறார்கள். ஊடகங்களால் ஒருவர் திடீரென புனிதப் பசு ஆக்கப்பட்டால் எச்சரிக்கையாக இருங்கள். ஒவ்வொரு ஊரிலும் இதே நாடகம் அரங்கேற்றப்படுகிறது.
நேர்மையானவராக, கறாரானவராக ஒருவர் ஊடகங் களால் தொடர்ந்து முன்னிறுத்தப்படுவார். அரசியல்வாதி களைத் தாண்டி புனிதப்படுத்தப்படுவார். எங்கள் ஊரில் சிங்கம் என்று சொல்லி ஓர் ஆட்டை எங்கள் தலையில் கட்டப் பார்க்கிறார்கள். ஆனால், ஆடு என்றாலே எங்க ளுக்குப் பிரியாணி மட்டும் தான் நினைவுக்கு வரும்.

இங்கே புனிதப் பசுவாக ஒருவரை (மேனாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய) கடந்த சில காலமாக உருவாக்கி வைத்திருக்கிறார்கள். தேர்தல் ஆணையர் சொல்லியிருக்கிறார் – அரசு அதிகாரிகள் கட்சிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று. நேற்று நீதிபதியாக இருந்தவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்த கையோடு பா.ஜ.க.வுடன் இணையப் போகிறார். இதற்கு முன் அவர் வழங்கிய தீர்ப்புகளை எப்படிப் பார்ப்பது?
எப்போதும் எச்சரிக்கையாக இருப்போம். வரலாறு நமக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது. அத்தனைச் சர்வாதி காரமும் ஜனநாயகத்தின் வழியில் வந்ததை நாம் பார்த் திருக்கிறோம்.
எங்கள் மீது நீட்டைத் திணித்தீர்கள்; பல்லாயிரக் கணக்கான மாணவர்களின் மருத்துவக் கனவைப் பறித்தீர்கள். எங்கள் பிள்ளைகளை நீட்டின் பெயரால் சாகடித்தீர்கள். நாங்கள் அனிதாவை இழந்தோம். பிறகு அதே வீராங் கனையின் படத்தைச் சுமந்து நீட்டுக்கு எதிராகப் போராடு கிறோம். நிச்சயம் நீட்டை நீக்குவோம். எங்கள் மீது நீங்கள் திணித்த தேசிய கல்விக் கொள்கை என்பது மனுவாதக் கல்விக் கொள்கை. இதைத் தான் எங்கள் மீது ராஜாஜி திணித்தார். அவரைத் தமிழ்நாடு தூக்கி எறிந்தது.

நாங்கள் ஸநாதனம் பேசும் மோடியின் குடும்பம் அல்ல – சமத்துவம் பேசும் திராவிடக் குடும்பம், பெரியாரின் குடும்பம், அம்பேத்கரின் குடும்பம், பகத் சிங், ஜோதிராவ் பூலே, கன்சிராமின் குடும்பம். ஜனநாயகத்தின் குடும்பம். போராடுவோம். வெற்றிபெறுவோம்” இவ்வாறு அவர் பேசினார்.
பொதுக் கூட்டத்தில் இந்திய மாணவர் அய்க்கியத்தின் சார்பில் கல்விக்கான கொள்கை அறிக்கை (Education Manifesto) வெளியிடப்பட்டது. தேசியக் கல்விக் கொள்கையை ஒழிப்போம் என்று, அனைத்து மாணவர் பிரதிகளும் கைகோத்து உறுதியேற்றனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பல்வேறு மாநிலப் பிரதிநிதிகளுக்கும் திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் மாநிலச் செயலாளர் இரா.செந்தூர்பாண்டியன் தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி ஆகியோரின் ஆங்கிலப் புத்தகங்களையும், கழக வெளியீடுகளையும் வழங்கினார். தி மாடர்ன் ரேசனலிஸ்ட் இதழை முகமது அப்ரிடி வழங்கினார். கழகக் கொடிகள் பேரணிச் சாலையில் கட்டப்பட்டிருந்ததுடன், கழகத்தின் சார்பில் முழக்கங்கள் வண்ணச் சுவரொட்டிகளாக கொல்கத்தா வீதிகளில் ஒட்டப்பட்டன.

திராவிட மாணவர் கழகத்தினருக்கு வரவேற்பு
முன்னதாக கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் சென்றடைந்த திராவிட மாணவர் கழகப் பிரதிநிதிகளை எஸ்.எப்.அய் கொல்கத்தா மாநகரப் பொறுப்பாளர் வழக்குரைஞர் ரிதங்கர், சாம்ராட் தத்தா, ஹுவஜித் சர்க்கார், உள்ளிட்ட தோழர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மேற்குவங்க யூனியன் வங்கி பிற்படுத்தப்படோர் நலச் சங்கப் பொறுப்பாளர்கள் பிரகாஷ் மஜூம்தார், நவ்ஷத் அலி அன்சாரி, ரிசர்வ் வங்கி ஊழியர் சங்கத் துணைத் தலைவர் அசோக் சர்க்கார் உள்ளிட்டோர் பேரணி நடந்த இடத்துக்கு வந்து நமது தோழர்களை வாழ்த்தியும், பேரணியில் பங்கேற்றும் சிறப்பித்தனர்.